சின்னத் திரையில் அழுத்த முத்திரை... 'நாடோடிகள்' படம் மூலம் வெள்ளித் திரையில்
அதிரடி முத்திரை... சமுத்திரக் கனியை சந்தியுங்கள்!
"விருதுநகர் மாவட்டத்தில் சேத்தூர் கிராமம் எனக்கு. விவசாயக் குடும்பம். எட்டாவது படிக்கும் வரை சினிமா பார்ப்பது குற்றம், அதைப் பத்திப் பேசுறது அதைவிடத் தப்பு என இருந்த சூழல். அப்ப நாங்க குரூப் ஸ்டடின்னு கிளம்புவோம். ஒரு சமயம், என்னதான் இருக்கும்னு ராத்திரி 'அலைகள் ஓய்வதில்லை' படம் பார்த்தேன். அவ்வளவுதான். அநேகமாக அடுத்து தியேட்டருக்கு வருகிற எல்லாப் படங்களையும் பார்க்க ஆரம்பிச்சேன்.
15 வயதில் அப்பா பாக்கெட்டில் இருந்து 130 ரூபாயை எடுத்துக்கிட்டு, வீட்டுக்குத் தெரியாமல், சென்னைக்கு பஸ் ஏறினேன். எங்கே இறங்கணும், எப்படிப் போகணும், யாரைப் பார்க்கணும்னு எந்தத் திட்டமும் இல்லை. ஒரு டைரியில் டி.ராஜேந்தர், பாக்யராஜ் முகவரிகள் மட்டும் இருந்தன. சென்னையில் தாம்பரம் நுழைந்ததும் 'எங்கே இறங்குறீங்க'ன்னு கண்டக்டர் கேட்டுக்கிட்டே இருந் தார். சென்னையில் நான் எதிர்கொண்ட முதல் கேள்விக்கே எனக்குப் பதில் தெரியலை.
மவுன்ட் ரோட்டில் கடைசி ஆளாக என்னை இறக்கிவிட்டார்கள். ஜெமினி பாலத்தின் அடியில் இருந்த நீண்ட இடைவெளியில் படுத்து உறங்கினேன். நல்ல உறக்கத்தில் போலீஸ் ஏட்டின் கைத்தடி என்னை உலுக்கியது.'சினி மாவில் நடிக்க வந்தேன். இங்கே இறக்கிவிட்டுட்டாங்க. தூங்குறேன்'னு சொன்னேன். 'இங்கேலாம் தூங்கக் கூடாது'ன்னு சொல்லி என்னை சைக்கிள்ல உக்காரவெச்சு அண்ணாசாலை காவல் நிலையத்துக்கு அழைத்துப் போனார். காவல் நிலையத்தின் தரையில்பேப் பர் விரிச்சு சென்னையில் என் முதல்நாள் இரவுத் தூக்கம் கழிந்தது.
மறுநாள் டி.ராஜேந்தர் வீட்டுக்குப் போனேன். அவரைப் பார்க்கவே முடியவில்லை. பாக்யராஜ் சார் வீட்டை நெருங்கவே முடியவில்லை. கையில் இருந்த பணம் கரைஞ்சுபோச்சு. சரி, வீட்டுக்குப் போய் காசைத் தேத்திட்டு மறுபடியும் வருவோம்னு நினைச் சுட்டு மிச்சம் இருந்த 20 ரூபாய்க்கு எதுவரை பஸ் போகும்னு கேட்டேன். விழுப்புரம் வரைன்னு சொன் னாங்க. அப்போ நான் நின்னுட்டு இருந்த இடம் எஸ்.எல்.என். ஹோட்டல். 'எனக்கு ஊருக்குப் போக இன்னும் 25 ரூபாய் வேணும். அவ்வளவு காசு சம் பாதிக்கணும். ஏதாவது வேலை கொடுங்க'ன்னு கேட்டேன். '25 ரூபா இப்பவே தர்றேன். ஊருக்குப் போ'ன்னு முதலாளி சொன்னார். ஆனா, நான் நாலு நாள் வேலை பார்த்துட்டுத்தான் காசு வாங்குவேன்னு சொல்லி வேலை பார்த்தேன்.
ஊருக்குத் திரும்பினேன். வீடு அமளிதுமளியா இருக்கு. போலீஸுக்குத் தகவல் சொல்ல, தெரிந்த வீட்டுக்கு எல்லாம் போயி அலசிக் கண் சிவந்து, அப்பாவும் அம்மாவும் இருக்காங்க. போனால் கட்டிப்பிடிச்சிக் கதறி அழறாங்க. கொஞ்ச காலம் அமைதியா இருந்தேன். ப்ளஸ் டூ முடிச்சேன். அப்புறம் அம்மாகிட்டேயே 1,000 ரூபாய் வாங்கிட்டு மறுபடியும் சென்னைக்கு வந்தேன். நடிக்க வாய்ப்பு கேட்டு அலைஞ்சேன். ஒரு இயக்குநர், 'உங்க ஊர்ல முகம் பார்க்கிற கண்ணாடியே விக்காதா?ன்னு கேட்டார். கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் டி.வி-யில் பரபரன்னு இருந்த டைரக்டர் சுந்தர் கே.விஜயனைப் பார்த்தேன். 'நீ படிப்பை முடிச்சுட்டு வா. பார்க்கலாம்'னு நம்பிக்கை கொடுத்து அனுப்பினார். ஊருக்கு வந்தேன். பி.எஸ்ஸி., கணிதம் படிச்சேன். அம்மா ஆசைக்குத் தலை வணங்கிட்டேன். இதுக்கு இடையில் என் அப்பா இறந்துட்டார்.
இனிமேல் சினிமாதான்னு திட்டவட்டமா முடிவு செய்துட்டு மறுபடி சென்னைப் படையெடுப்பு. இப்பக் கொஞ்சம் சுலபமாக இருந்தது. பக்குவம் பிடிபட்டு இருந்தது. நண்பர்கள் கிடைச்சாங்க. நகரத்தின் சாமர்த்தியம் புரிந்தது. கொஞ்சம் நகரத்தோட பழகும் வித்தை தெரிந்தது. சுந்தர் கே.விஜயன் 12 சீரியல்களுக்கு மேல் பரபரப்பாக இயங்கினார். அவருக்குத் துணையாக நான் இருந்தேன். நேரம் காலம் இல்லாமல் வெறித்தனமாக வேலை பார்த்தேன். 'டைரக்ஷனுக்கு வா'ன்னு சுந்தர் சார் சொன்னார். அதுவரைதள்ளி வெச்சிருந்த நடிப்பு தாகத்துக்கு முற்றுப்புள்ளி வெச்சேன்.
கே.பாலசந்தர் சார் கூப் பிட்டார். அவரோடு படங்களில், சீரியல்களில் இறங்கினேன். அவரோட மலைச்சுப்போகிற அனுபவம் எனக்கும் கை கொடுத்தது. அப்புறம்தான் எஸ்.பி.பி. சரண் 'உனக்குப் படம் தர்றேன் வா'ன்னு சொல்லி 'உன்னைச் சரண் அடைந்தேன்' படம் கொடுத்தார். படம் வெளியாகி நல்ல மரியாதை கிடைச்சது. அந்தப் படம் பார்த்துட்டு ஞானவேல் சார் ஒரு பெரிய தொகை கொடுத்து கதை, திரைக்கதை இருக்கு. டைரக்ஷன் பண்ணுன்னு சொன்னார். விஜயகாந்த் நடிச்ச 'நெறஞ்ச மனசு'. மனசை செலுத்தித்தான் டைரக்ஷன் பண்ணினேன். ஆனாலும் வெற்றி இல்லை. மறுபடியும் 'அண்ணி', 'செல்வி'ன்னு சின்னத்திரை வேட்டை.
கையில் 'நாடோடிகள்' திரைக்கதை இருந்தது. நான் அதைச் சொல்லாத நடிகர், தயாரிப்பாளர் கிடையாது. நாலு பேர் சப் ஜெக்ட்டான்னு நடிகர்கள் பின்வாங்கினாங்க. அவங்களைப் பார்த்துட்டு தயாரிப்பாளர்களும்.
இப்படி இருக்கும்போது ஒருநாள் சசிக்குமார் போன். ' 'சுப்பிரமணியபுரம்'னு ஒரு படம். உங்களுக்கு ஒரு கேரக்டர். முடி வளர்க்க ணும். சம்மதமா?'ன்னு கேட்டார். அடடா, இத்தனை வருஷத்துக்குப் பின்னாடி என்னை நடிக்கக் கூப்பிடுறார். 'சரி நண்பா'ன்னு சொல்லி கதையே கேட்காமல், நடிச்சேன். நல்ல பெயர்.அவர்கிட்டேயே 'நாடோடிகள்' சொன்னேன். 'நிச்சயம் பண்ணலாம். ஜனங்க என்னை ஏத்துக்கிட்டா, நான் நடிக்கிறேன்... ப்ராமிஸ்'னு சொன்னார். எனக்கான கதவைத் திறந்து பெரிய வெளிச்சம் காட்டினார். படம் அபாரமான வெற்றி. இன்று அவரது இயக்கத்தில் அனல் தெறிக்கிற பெரிய கேரக்டர். கேள்விப்பட்டு மோகன்லால் அவர் படத்துக்குக் கூப்பிடுகிறார். வெற்றிமாறன் கதை சொல்லிட்டு, 'நீங்க நடிச்சா நல்லா இருக்கும்'கிறார். எல்லாம் சரி. இதற்கெல்லாம் அடிப்படை...?
நான் எப்பவும் என் நம்பிக்கையைக் கைவிட்டது இல்லை. எத்தனை தடவை ஊருக்குப் போய் வந்தாலும் என் கனவு சென்னையில்தான் இருந்தது. என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்னு நினைக்கிற, இன்னும் கிராமத்தைவிட்டு விலகாத அம்மா கமலா எனக்கு ஆத்ம பலம். மாமா எப்படியும் பெரிய டைரக்டர் ஆவார்னு நம்பி எனக்குக் கழுத்தை நீட்டிய அக்கா பொண்ணு ஜெயலட்சுமி இல்லேன்னா... நான் இல்லை.
போதனை பண்ணுகிற அளவுக்கு நான் சாதிக்கலை. ஆனால், முயற்சிகளில் தளர்வு அடைவது வேண்டாத வேலை. கொஞ்ச வருஷம் உழைத்துவிட்டு ஒண்ணும் கிடைக்கலைன்னு சொல்லிட்டு திரும்பிவிடக் கூடாது. உங்க ளுக்கான மகுடம்
Thursday, August 19, 2010
Tuesday, August 17, 2010
நீயும்... நானும்! - கோபிநாத்
என் வேலையைத் தவிர வேறு எதுவும் என்னால் செய்யவே முடியவில்லை.
நண்பர்களோடு பேசவோ, ஒரு சினிமாவுக்குப் போகவோகூட முடியாது. 24 மணி நேரமும் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்கிறேன். இப்படி நிறையப் பேர் சொல்வது உண்டு.
இன்றைக்கு, அநேகமாக எல்லோருமே பிஸியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா?
குறைந்தபட்சத் தேவைகளின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும்போது எதையாவது கூடுதலாகச் செய்யவேண்டி இருக்கிறது.
ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் போகிற ஒரு மாணவனுக்கு அதிகபட்சம் கூடுதலாக ஒரு டியூஷன் வகுப்பு இருக்கும். வேலையில் இருப்பவர் என்றால், என்றைக்காவது ஒரு சனிக்கிழமை, அரை நாள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். ஆனால், இன்றைய நிலையே வேறு.
ஆக, எல்லோருமே சொல்கிறபடி காலம் ரொம்ப மாறிப்போச்சு. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சாவகாசமாக சைக்கிள் துடைத்து, ஒரு டம்ளர் காபியை ஒரு மணி நேரம் உறிஞ்சிக் குடித்து, சாயந்திரம் அத்தை வீட்டுக்குப் போய் அரட்டை அடித்துப் பொழுதுபோக்குகிற வியப்புஎல்லாம் முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இன்று - சனி, ஞாயிறுகளைக்கூட வாரம் முழுதும் தேக்கிவைத்திருந்த வேலைகளைச் செய் வதற்குச் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி இல்லை என்றால், ஓய்வு எடுத்தல் என்பதும் இன்னொரு வேலை மாதிரி தோன்றுகிறது.
இதற்கு மத்தியில் எங்கே இருந்து இயற்கையை ரசிப்பது, ஜன்னல் ஓரக் காற்று வாங்குவது, ஓவியம் வரைவது, கவிதை வாசிப்பது, நாய்க் குட்டியைக் கொஞ்சுவது, குழந்தையின் குறும்புத்தனங்களை அனுபவிப்பது எல்லாம் நடக்கும்?
அதற்கென்று ஒரு நேரம் வேண்டும். மனசு லேசாக இருக்க வேண்டும் என்று இனிமேலும் பழைய தத்துவங்களைப் பேசிக்கொண்டு இருக்க முடியாது. சரி, வேலை வேலை என்று சர்வ சதா காலமும் அதே வேலையைச் செய்துகொண்டு இருப்பதால் சந்தோஷம் கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்ல முடிவது இல்லை.
உண்மையில் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்குதல் என்பது இன்றைக்கு நடைமுறைச் சாத்தியங்கள் குறைவான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. காலம் மாறுவதற்கு ஏற்ப சித்தாந்தங்களும் மாறித்தான் ஆக வேண்டும். வேலை எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கொடைக்கானலோ, குலுமணாலியோ போய் நிம்மதியாக இருந்துவிட்டு வர வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அப்படியே காலையில் லேட்டா எந்திரிச்சு, மிதமான குளிர்ல ஒரு வாக்கிங் போய்ட்டு ரோட்டு ஓரக் கடையில சூடா டீ குடிச்சுக்கிட்டே இயற்கையை ரசிக்க வேண்டும் என்று எண்ணற்ற முறை நாம் திட்டம் போட்டு இருக்கலாம்.
திட்டமிட்டபடி சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போனாலும் மனசு நிம்மதியாக இருக்கிறதா? கொரியர் அனுப்பச் சொன்னேனே... அனுப்பி இருப்பானா, இல்லையான்னு தெரியலையே? நான் பாட்டுக்கு கொடைக்கானலுக்கு வந்துட்டேன். அந்த ரமேஷ் பய இந்த ரெண்டு நாள்ல மாங்கு மாங்குனு மனப்பாடம் பண்ணிடுவானா என்று மனசு பலவாறாக மேயும்.
விஷயம் ரொம்ப சிம்பிள், 'வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கை என்பதே அனுபவித்தலுக்கு உரியதுதான்'. மாறி இருக்கும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமது சித்தாந்தங்களையும், வேலை கெடாமல் சந்தோஷமாகவும் இருப்பதற்கான உத்தியையும் கற்றுக்கொள்வதுதான் உத்தமம்.
ஒருவர், நேரம் காலம் தெரியாமல் வேலை செய்கிற பேர்வழி. வாழ்வின் எந்த அழகியலையும் அனுபவிக்க அவரால் முடியவில்லை. என்னடா வாழ்க்கை இது என்று விரக்தி அடைந்த அவர், சந்தோஷமாக இருப் பது எப்படி என்ற ரகசியத்தை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதற்காக ஒரு ஞானியைச் சந்திக்கக் கடும் தடை களைத் தாண்டி அவரது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந் தார். இயற்கை எழில் சூழ்ந்த ஒரு மலையில், அரண் மனை போன்ற ஒரு மாளிகையில் அந்த ஞானி வாழ்ந்து வந்தார்.
வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள், மிக அழகான ஓவியங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப் பட்ட கலைப்பொருட்கள் என அந்த மாளிகை ரொம்பவே வசீகரமாக இருந்தது. ஞானியைச் சந்திக்கப் பெரிய கூட்டம் காத்திருந்ததால் மூன்று மணி நேரம் பொறுமையாக இருந்து ஞானியிடம் பேசினார் சந்தோ ஷத்தின் ரகசியத்தைத் தேடியவர்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வா. பிறகு, பதில் சொல்கிறேன்" என்றார்.
"இதோ கிளம்பிவிட்டேன்" என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், "ஒரு நிமிடம், இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக்கொள்ளுங்கள்... அதில் இருக்கிற எண்ணெய் சிந்திவிடாமல் சுற்றிப் பார்."
மாளிகையைச் சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம், "என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஓவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?" என்று கேட்டார்.
"மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை" என்றார் அந்த மனிதர்.
"அது போகட்டும், மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த ராமாயண வாசகங்கள்? கிரேக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒளி விளக்குகள்? நூலக ஜன்னல் வழியே தெரியும் பரமானந்தர் கோயில்?"
எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான்... "மன்னியுங்கள், நான் அதைக் கவனிக்கவில்லை."
"இரண்டு மணி நேரம் என்னதான் செய்தீர்கள்?" என்றார் ஞானி.
"இதோ இந்த ஸ்பூனில் இருக்கிற எண்ணெய் சிதறாமல் பார்த்துக்கொண்டேன்" என்றார் அந்த மனிதர்.
"போகட்டும்... இப்போதும் அதே ஸ்பூனோடு எல்லா வற்றையும் சுற்றிப்பாருங்கள்... அனைத்தையும் ரசித்துப் பாருங்கள்" என்று ஞானி அவரை அனுப்பிவைத்தார்.
இந்த முறை ஞானியிடம் வந்த அவர், சுவாமி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னார். "அது சரி, ஸ்பூனில் இருந்த எண்ணெய் எங்கே?" என்றார் ஞானி. "மாளிகையைச் சுற்றிப் பார்க்கிற சுவாரஸ்யத்தில் எண்ணெய் சிந்திவிட்டது" என்றார் அந்த மனிதர்.
"எண்ணெயும் சிந்தாமல், சுற்றி இருப்பதை ரசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். மாறாக, ரசிப்பதில் கவனம் செலுத்தினால் எண்ணெய் சிதறும் என்று தர்க்கம் செய்யாதீர்கள். அதுதான் சந்தோஷத்தின் ரகசியம்" என்றார் ஞானி.
இது கதைக்கு வேண்டுமானால் சாத்தியம், யதார்த்த வாழ்க்கையில் இதெல்லாம் நடக்காது என்று மறுபடியும் சண்டைக்கு வராதீர்கள். வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காகப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.
பணிச் சுமைகளுக்கு மத்தியில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று திட்டமிடுவதற்கு முன்னதாக, வேலையும் கெடாமல் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை... வேலைப்பளு, வாழ்க்கையை அனுபவித்தல் இந்த இரண்டு விஷயங்களைச் சமன் செய்து கொள்வது குறித்த அறிவைத் தரும்.
சந்தோஷமாக இருப்பது எப்படி என்று தனியாக ஒரு பட்டியல் போட முடியாது. ஞாயிற்றுக்கிழமை வரும் வரை காத்திருக்கவும் வேண்டியது இல்லை. இந்த நாள், இந்த நிமிடம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்கிறோம்.
எல்லா வேலைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒருநாள் ஒய்யாரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிற அந்த நாள் வரப்போவது இல்லை. வாழ்க்கை மாறிவிட்டது. பணி முறைகள், பொறுப்புகள், நடைமுறைகள் மாறிவிட்டன. நாமும் மாறிக்கொள்வோம்.
இவ்வளவு சொல்லிவிட்டீர்கள்... எண்ணெயும் சிந்தாமல், மாளிகையின் அழகையும் ரசிப்பதற்கான உத்தி என்னவென்றும் சொல்லிவிடுங்கள் என்று யாரிடமும் கேட்காதீர்கள். உங்களிடமே கேளுங்கள். உங்களைப்பற்றியும் உங்கள் சூழ் நிலைகள்பற்றியும் உங்களைவிட யாருக்கும் அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
நினைவில் இருக்கட்டும்... வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கையே அனுபவித்தலுக்கு உரிய ஒன்றுதான்!
நண்பர்களோடு பேசவோ, ஒரு சினிமாவுக்குப் போகவோகூட முடியாது. 24 மணி நேரமும் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டே இருக்கிறேன். இப்படி நிறையப் பேர் சொல்வது உண்டு.
இன்றைக்கு, அநேகமாக எல்லோருமே பிஸியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களா?
குறைந்தபட்சத் தேவைகளின் அளவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும்போது எதையாவது கூடுதலாகச் செய்யவேண்டி இருக்கிறது.
ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் போகிற ஒரு மாணவனுக்கு அதிகபட்சம் கூடுதலாக ஒரு டியூஷன் வகுப்பு இருக்கும். வேலையில் இருப்பவர் என்றால், என்றைக்காவது ஒரு சனிக்கிழமை, அரை நாள் கூடுதலாக வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். ஆனால், இன்றைய நிலையே வேறு.
ஆக, எல்லோருமே சொல்கிறபடி காலம் ரொம்ப மாறிப்போச்சு. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சாவகாசமாக சைக்கிள் துடைத்து, ஒரு டம்ளர் காபியை ஒரு மணி நேரம் உறிஞ்சிக் குடித்து, சாயந்திரம் அத்தை வீட்டுக்குப் போய் அரட்டை அடித்துப் பொழுதுபோக்குகிற வியப்புஎல்லாம் முடிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
இன்று - சனி, ஞாயிறுகளைக்கூட வாரம் முழுதும் தேக்கிவைத்திருந்த வேலைகளைச் செய் வதற்குச் செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி இல்லை என்றால், ஓய்வு எடுத்தல் என்பதும் இன்னொரு வேலை மாதிரி தோன்றுகிறது.
இதற்கு மத்தியில் எங்கே இருந்து இயற்கையை ரசிப்பது, ஜன்னல் ஓரக் காற்று வாங்குவது, ஓவியம் வரைவது, கவிதை வாசிப்பது, நாய்க் குட்டியைக் கொஞ்சுவது, குழந்தையின் குறும்புத்தனங்களை அனுபவிப்பது எல்லாம் நடக்கும்?
அதற்கென்று ஒரு நேரம் வேண்டும். மனசு லேசாக இருக்க வேண்டும் என்று இனிமேலும் பழைய தத்துவங்களைப் பேசிக்கொண்டு இருக்க முடியாது. சரி, வேலை வேலை என்று சர்வ சதா காலமும் அதே வேலையைச் செய்துகொண்டு இருப்பதால் சந்தோஷம் கிடைக்கிறதா? இந்தக் கேள்விக்கும் சரியான பதில் சொல்ல முடிவது இல்லை.
உண்மையில் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்குதல் என்பது இன்றைக்கு நடைமுறைச் சாத்தியங்கள் குறைவான ஒரு விஷயமாக மாறி இருக்கிறது. காலம் மாறுவதற்கு ஏற்ப சித்தாந்தங்களும் மாறித்தான் ஆக வேண்டும். வேலை எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு இரண்டு நாட்கள் கொடைக்கானலோ, குலுமணாலியோ போய் நிம்மதியாக இருந்துவிட்டு வர வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். அப்படியே காலையில் லேட்டா எந்திரிச்சு, மிதமான குளிர்ல ஒரு வாக்கிங் போய்ட்டு ரோட்டு ஓரக் கடையில சூடா டீ குடிச்சுக்கிட்டே இயற்கையை ரசிக்க வேண்டும் என்று எண்ணற்ற முறை நாம் திட்டம் போட்டு இருக்கலாம்.
திட்டமிட்டபடி சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போனாலும் மனசு நிம்மதியாக இருக்கிறதா? கொரியர் அனுப்பச் சொன்னேனே... அனுப்பி இருப்பானா, இல்லையான்னு தெரியலையே? நான் பாட்டுக்கு கொடைக்கானலுக்கு வந்துட்டேன். அந்த ரமேஷ் பய இந்த ரெண்டு நாள்ல மாங்கு மாங்குனு மனப்பாடம் பண்ணிடுவானா என்று மனசு பலவாறாக மேயும்.
விஷயம் ரொம்ப சிம்பிள், 'வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று தனியாக நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கை என்பதே அனுபவித்தலுக்கு உரியதுதான்'. மாறி இருக்கும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நமது சித்தாந்தங்களையும், வேலை கெடாமல் சந்தோஷமாகவும் இருப்பதற்கான உத்தியையும் கற்றுக்கொள்வதுதான் உத்தமம்.
ஒருவர், நேரம் காலம் தெரியாமல் வேலை செய்கிற பேர்வழி. வாழ்வின் எந்த அழகியலையும் அனுபவிக்க அவரால் முடியவில்லை. என்னடா வாழ்க்கை இது என்று விரக்தி அடைந்த அவர், சந்தோஷமாக இருப் பது எப்படி என்ற ரகசியத்தை எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்.
அதற்காக ஒரு ஞானியைச் சந்திக்கக் கடும் தடை களைத் தாண்டி அவரது இருப்பிடத்துக்கு வந்து சேர்ந் தார். இயற்கை எழில் சூழ்ந்த ஒரு மலையில், அரண் மனை போன்ற ஒரு மாளிகையில் அந்த ஞானி வாழ்ந்து வந்தார்.
வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள், மிக அழகான ஓவியங்கள், வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப் பட்ட கலைப்பொருட்கள் என அந்த மாளிகை ரொம்பவே வசீகரமாக இருந்தது. ஞானியைச் சந்திக்கப் பெரிய கூட்டம் காத்திருந்ததால் மூன்று மணி நேரம் பொறுமையாக இருந்து ஞானியிடம் பேசினார் சந்தோ ஷத்தின் ரகசியத்தைத் தேடியவர்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றிப் பார்த்துவிட்டு வா. பிறகு, பதில் சொல்கிறேன்" என்றார்.
"இதோ கிளம்பிவிட்டேன்" என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், "ஒரு நிமிடம், இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக்கொள்ளுங்கள்... அதில் இருக்கிற எண்ணெய் சிந்திவிடாமல் சுற்றிப் பார்."
மாளிகையைச் சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம், "என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஓவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?" என்று கேட்டார்.
"மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை" என்றார் அந்த மனிதர்.
"அது போகட்டும், மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த ராமாயண வாசகங்கள்? கிரேக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒளி விளக்குகள்? நூலக ஜன்னல் வழியே தெரியும் பரமானந்தர் கோயில்?"
எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான்... "மன்னியுங்கள், நான் அதைக் கவனிக்கவில்லை."
"இரண்டு மணி நேரம் என்னதான் செய்தீர்கள்?" என்றார் ஞானி.
"இதோ இந்த ஸ்பூனில் இருக்கிற எண்ணெய் சிதறாமல் பார்த்துக்கொண்டேன்" என்றார் அந்த மனிதர்.
"போகட்டும்... இப்போதும் அதே ஸ்பூனோடு எல்லா வற்றையும் சுற்றிப்பாருங்கள்... அனைத்தையும் ரசித்துப் பாருங்கள்" என்று ஞானி அவரை அனுப்பிவைத்தார்.
இந்த முறை ஞானியிடம் வந்த அவர், சுவாமி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னார். "அது சரி, ஸ்பூனில் இருந்த எண்ணெய் எங்கே?" என்றார் ஞானி. "மாளிகையைச் சுற்றிப் பார்க்கிற சுவாரஸ்யத்தில் எண்ணெய் சிந்திவிட்டது" என்றார் அந்த மனிதர்.
"எண்ணெயும் சிந்தாமல், சுற்றி இருப்பதை ரசிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். மாறாக, ரசிப்பதில் கவனம் செலுத்தினால் எண்ணெய் சிதறும் என்று தர்க்கம் செய்யாதீர்கள். அதுதான் சந்தோஷத்தின் ரகசியம்" என்றார் ஞானி.
இது கதைக்கு வேண்டுமானால் சாத்தியம், யதார்த்த வாழ்க்கையில் இதெல்லாம் நடக்காது என்று மறுபடியும் சண்டைக்கு வராதீர்கள். வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சில விஷயங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. அதற்காகப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.
பணிச் சுமைகளுக்கு மத்தியில் சந்தோஷமாக இருப்பது எப்படி என்று திட்டமிடுவதற்கு முன்னதாக, வேலையும் கெடாமல் வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும் என்று நம்ப வேண்டும். அந்த நம்பிக்கை... வேலைப்பளு, வாழ்க்கையை அனுபவித்தல் இந்த இரண்டு விஷயங்களைச் சமன் செய்து கொள்வது குறித்த அறிவைத் தரும்.
சந்தோஷமாக இருப்பது எப்படி என்று தனியாக ஒரு பட்டியல் போட முடியாது. ஞாயிற்றுக்கிழமை வரும் வரை காத்திருக்கவும் வேண்டியது இல்லை. இந்த நாள், இந்த நிமிடம் எப்படி இருக்க வேண்டும் என்று நாம்தான் முடிவு செய்கிறோம்.
எல்லா வேலைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஒருநாள் ஒய்யாரமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிற அந்த நாள் வரப்போவது இல்லை. வாழ்க்கை மாறிவிட்டது. பணி முறைகள், பொறுப்புகள், நடைமுறைகள் மாறிவிட்டன. நாமும் மாறிக்கொள்வோம்.
இவ்வளவு சொல்லிவிட்டீர்கள்... எண்ணெயும் சிந்தாமல், மாளிகையின் அழகையும் ரசிப்பதற்கான உத்தி என்னவென்றும் சொல்லிவிடுங்கள் என்று யாரிடமும் கேட்காதீர்கள். உங்களிடமே கேளுங்கள். உங்களைப்பற்றியும் உங்கள் சூழ் நிலைகள்பற்றியும் உங்களைவிட யாருக்கும் அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
நினைவில் இருக்கட்டும்... வாழ்க்கையை அனுபவிப்பதற்கு என்று நேரம் ஒதுக்க முடியாது. வாழ்க்கையே அனுபவித்தலுக்கு உரிய ஒன்றுதான்!
நீயும்... நானும்! - கோபிநாத்
2011-ம் ஆண்டில் உலக அளவில் செல்போன்வைத்திருக்கும் இளைஞர்களில் ஐந்தில்
ஒருவர் இந்திய இளைஞராக இருப்பார் என்கிறது ஒரு கணக்கு. இப்போதும்கூட செல்போனின் மிகப் பெரிய சந்தையாக விளங்குவது இந்தியாதான். குறிப்பாக, இந்திய இளைஞர்களின் செல் போன் மார்க்கெட் மட்டும் 21 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
நம்மைவிட அதிகமான பொருட்களைத் தொடர்ந்து கண்டுபிடிக்கும் சீனாவில், 22 கோடியே 55 லட்சம் இளைஞர்களிடம் செல்போன் இணைப்புகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 28 கோடியே 10 லட்சம் இணைப்புகள் இளைஞர்கள் வசம் உள்ளன. உலகின் மிகப் பெரிய, 'இளைஞர்களுக்கான செல்போன் சந்தை' இந்தியாதான். அடுத்த ஆண்டு இந்திய அளவில் செல்போன்வைத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிமாகிவிடும். 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இப்போது இல்லை. செல்போன் என்பது இந்திய இளைஞர்களிடம், அவர்கள் உடலின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது.
ஓர் அத்தியாவசியமான தகவல் தொடர்புச் சாதனம் அதிகமான இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பது தேசம் வளர்ந்து இருப்பதன் அடையாளங்களில் ஒன்றுதான். ஆனால், இந்த செல்போனை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி.
ஒரு சராசரி இந்திய இளைஞர் ஒரு நாளைக்கு செல்போனில் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அடுத்தவருக்கு போன் செய் வது, தனக்கு வருகிற அழைப்புகளுக்குப் பேசுவது, FM கேட்பது, SMS செய்வது செல்போனில் கேம்ஸ் விளையாடுவது, அதில் இருக்கும் வசதிகள் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக அதனை ஆய்வு செய்வது எனப் பல விஷயங்கள் இதில் அடக்கம்.
'செல்போன் இல்லைன்னா எனக்குக் கை ஒடிஞ்சதுபோல இருக்கும்!' என்று சொல்வது இப்போது சகஜமான டயலாக். இளைஞர்கள் என்று இல்லை; 'செல்போன் அடிக்ஷன்' என்பது அமெரிக்க அதிபர் ஒபாமா வரை நீண்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் செல்போன் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், தனக்குப் பிடித்த ஒரு குறிப்பிட்ட வகை செல்போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று அவர் சொன்னதால், பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய ஒரு செல்போன் ஒபாமாவுக்காக வடிவமைக்கப்பட்டு அவருக்குக் கொடுக் கப்பட்டுள்ளது.
'எந்தத் தொழில்நுட்பக் கருவியும், அது எந்தக் குறிப் பிட்ட தேவைக்காக உருவாக்கப்பட்டதோ, அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்' என்பார்கள். இந்திய இளைஞர்கள் மத்தியில் அது, அவ்வாறான மதிப்பீட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதே உண்மை. இல்லை என்றால் எதற்காக நான்கு மணி நேரம் தேவைப்படப்போகிறது.
அர்த்தம் இல்லாமல் பேசாதீர்கள். 'செல்போன் எவ்வளவு பயனுள்ள கருவி தெரியுமா? அதனால், எனக்கு எவ்வளவு வேலை நடக்கிறது தெரியுமா?' உண்மைதான். ஆனால், நம்மை அறியாமல் அதில் நமது நேரம் எவ்வளவு விரயமாகிறது என்ற கணக்கீடு பதற்ற மாகவே இருக்கிறது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை ஒரு முறை பார்க்கச் சென்று இருந்தபோது, அவர் கையில் மிகச் சாதாரணமான, நவீன வசதிகள் அதிகம் இல்லாத ஒரு செல்போன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதுபற்றி அவரிடம் கேட்டேன் 'செல்போன் என்பது பேசுவதற்காக. அதற்கு இந்த மாடலே போதும்!' என்றார்.
சிலர் தனது செல்போனில் எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். அழைப்பு வந்தாலும், வராவிட்டாலும் அதனை எடுத்துப் பார்ப்பார்கள், அதில் இருக்கிற ஒரு சிறப்பு வசதியைத் திறந்து உள்ளே போய் வருவார்கள். பேன்ட் பாக்கெட்டில் இருந்து சட்டைப் பாக்கெட்டுக்கு மாற்றுவார்கள். கையில் செல்போனை வைத்துக்கொண்டே அதைத் தேடுவார்கள்.
குளிக்கப்போகும்போது, கழிவறைக்குள் செல்லும்போது, சாப்பிடும்போது, தூங்கும்போது இப்படி எல்லா நேரங்களிலும் அது தன்னுடனேயே இருக்க வேண்டும்... இருந்தாக வேண்டும். அவசரமாக, அவசியமாக ஓர் அழைப்பை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் நிலையில், இந்த அணுகுமுறை சரிதான். ஆனால், இதுவே நிரந்தப் பழக்கமாக மாறிப்போவது செல்போன் அடிக்ஷன் என்ற மனோவியல் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. அது, செல்போன் இல்லாமல் என்னால் இயங்க முடியாது என்ற நிர்ப்பந்த நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது.
முக்கியமான விஷயமாக யாருடனாவது பேசிக்கொண்டு இருக்கும்போது என் செல்போன் எங்கே இருக்கிறது? ஏதாவது அழைப்பு வந்து இருக்குமா? யாராவது SMS அனுப்பி இருக்கிறார்களா? என்னாச்சு தெரியலையே என்று மனசுக்குள் எதிர்பார்ப்பும் பதற்றமும் கலந்த எண்ண ஓட்டம் இருக்கிறது என்றால், நிச்சயமாக செல்போனிடம் நீங்கள் அடிமைப்பட்டுக்கிடக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
தூரங்களைக் குறைக்கவும், செயல்பாடுகளின் வேகத்தை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட ஒரு மிகச் சிறந்த அறிவியல் படைப்பு, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்தை அபகரிக் கிறது என்றால், அதைவிட ஆபத்து வேறொன்றும் இல்லை.
நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்த செல்போன் என்ற கருவி இல்லாமல்தான் நமது வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. ஆனால் இன்று, 'இந்திய எல்லையில் இருந்து போருக்கு வரச் சொல்லி எப்போது வேண்டு மானாலும் எனக்கு போன் வரலாம்' என்கிற மாதிரியான படபடப்போடு செல்போனையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
செல்போன் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிற ஒரு நண்பர் சொன்ன பயிற்சி இது. தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள். உங்க ளுக்கு, அன்று காலையில் இருந்து இரவு வரை தொலைபேசி அழைப்புகள் யார், யாரி டம் இருந்து வந்திருக்கின்றன என்று பாருங் கள். அதில் எத்தனை அழைப்புகள் பயன் உள்ளவை? எத்தனை அழைப்புகள் உங்கள் நேரத்தைத் தின்றவை என்று பட்டியலிடுங்கள். அதேபோல் நீங்கள் செய்த போன் கால்களிலும் உபயோகமானவை எத்தனை, அர்த்தம் இல் லாதவை எத்தனை என்று கணக்கிடுங்கள்.
இதெல்லாம் ஒரு வேலையா என்று தோன் றும்... இருந்தாலும், தொடர்ந்து ஒரு வாரம் இதைச் செய்துபாருங்கள். இந்த வேலையைச் செய்யும்போது நமக்கே நாம் அர்த்தமற்று அரட்டை அடித்துக்கொண்டு இருந்த நேர அளவுகள் தெரிய வரும்.
'நான் ஃப்ரீயா இருந்தேன். அதான் போன் செய்தேன்... என்னடா பண்ணிட்டு இருக்கே?', 'சும்மா, ஜஸ்ட் லைக் தட் கால் பண்ணினேன்', 'ஏன்டி இந்த கிரிஜா பொண்ணு ரொம்பதான் பந்தா பண்றா!', 'செம போர் அதான்டி உனக்கு போன் பண்ணினேன்', 'எனக்கு லஞ்ச் டைம் நீ என்ன பண்றேன்னு கேட்கலாம்னுதான் போன் பண்ணினேன்', 'அந்தப் படம் செம மொக்கையாம்ல' - இப்படித் தினந்தோறும் எத்தனை அழைப்புகள் வருகின்றன என்பது கண்கூடாகத் தெரியும்.
நண்பர்கள் யாராவது சும்மா போன் பண்ணினா பேசுவது இல்லையா? அப்புறம் எதுக்கு செல்போன் என்று தோன்றலாம். இல்லை என்று மறுக்கவே இல்லை. ஆனால், 'நான் வெட்டியா இருக்கேன். அதான் உனக்கு போன் பண்ணேன்' என்று சொல் கிறவர்கள் உங்கள் நேரத்தை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். 'எனக்குப் பொழுது போகவில்லை என்றால், இவனுக்கு போன் பண்ணலாம்... பொழுதுபோகும்' என்ற எண்ணத்தை எல்லா போன் அழைப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலம் நாமே உருவாக்குகிறோம்.
இந்த ஒரு வாரப் பயிற்சியில் உங்களை ஒரு பொழுதுபோக்குக் கருவியாகப் பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொஞ்சம் தூரத்தில் வையுங்கள். உங்களுக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுத்துப் பேச வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.
செல்போன் என்ற கருவி உங்கள் வசதிக்கானது. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நேரத்தை விரயம் செய்ய ஒருவரை அனுமதிக்கிறீர்கள் என்பது உங்களை நீங்களே அவமரியாதை செய்துகொள்வதற்குச் சமம்.
இந்த ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு, யார் அழைப்புக்கு எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது விளங்கும். நம்மை அடுத்தவர் எப்படி அணுக வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். ஏதோ ஒரு வேலையாக இருக்கும்போது வருகிற போன் அழைப்பைத் தேர்வு செய்து எடுப்பதற்கும், தேவையான அளவு மட்டும் பேசுவதற்கும் இந்தப் பயிற்சி உங்களுக்கு உதவலாம்.
உங்கள் வேலைக்கு உதவுகிற, வாய்ப்புகளை வழங்குகிற, உங்கள் பிரச்னைகளைத் தீர்க்கிற அழைப்புகளைத் தேர்வுசெய்து பேசுங்கள். இல்லை என்றால், நேரத்தைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் தேர்வாக நீங்கள் மாறிப்போவீர்கள்.
ஒரு கருவியின் நோக்கம் எதுவோ, அந்த நோக்கத்துக்காக மட்டும் அதைப் பயன்படுத்தும் வரை ஆபத்து இல்லை. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பணம் நேரம்தான். அதை 'தேமே' என்று செலவிடுவது நியாயமற்றது.
2011-ல் இந்திய இளைஞர்கள் எல்லார் கையிலும் செல்போன் வரட்டும். அது நம் வளர்ச்சியின் அடையாளம். அதை மிகச் சரியாகக் கையாள்வதற்கான நெறி மேலும் மேலும் வளர வேண்டும். அதுதான் நாம் மென்மேலும் வளரப்போவதற்கான அடையாளம்.
எனக்கு, உங்களுக்கு எல்லோருக்கும் நேரம் முக்கியம். கடந்துபோன நேரத்தை மீட்கும் சக்தி யாருக்கும் இல்லை. இதைப் படித்து முடித்துவிட்டு, 'கோபி இந்த வாரம் விகடன்ல செல்போன்பத்தி ஒரு கட்டுரை எழுதி இருக்காரு பார்த்தியா...' என்று செல் போனில் நீண்ட நேரம் பேசாதீர்கள். ஒரு SMS அனுப்பி ஒரு நிமிடத்தில் வேலையை முடியுங்கள்.
எந்த அறிவியல் படைப்பும்
நம்மை ஆளக் கூடாது...
நாம்தான் அதை ஆள வேண்டும்!
ஒருவர் இந்திய இளைஞராக இருப்பார் என்கிறது ஒரு கணக்கு. இப்போதும்கூட செல்போனின் மிகப் பெரிய சந்தையாக விளங்குவது இந்தியாதான். குறிப்பாக, இந்திய இளைஞர்களின் செல் போன் மார்க்கெட் மட்டும் 21 மில்லியன் டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
நம்மைவிட அதிகமான பொருட்களைத் தொடர்ந்து கண்டுபிடிக்கும் சீனாவில், 22 கோடியே 55 லட்சம் இளைஞர்களிடம் செல்போன் இணைப்புகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் 28 கோடியே 10 லட்சம் இணைப்புகள் இளைஞர்கள் வசம் உள்ளன. உலகின் மிகப் பெரிய, 'இளைஞர்களுக்கான செல்போன் சந்தை' இந்தியாதான். அடுத்த ஆண்டு இந்திய அளவில் செல்போன்வைத்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அமெரிக்காவின் மக்கள் தொகையைவிட அதிமாகிவிடும். 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை இப்போது இல்லை. செல்போன் என்பது இந்திய இளைஞர்களிடம், அவர்கள் உடலின் ஓர் அங்கமாகவே மாறி இருக்கிறது.
ஓர் அத்தியாவசியமான தகவல் தொடர்புச் சாதனம் அதிகமான இளைஞர்களின் கையில் இருக்கிறது என்பது தேசம் வளர்ந்து இருப்பதன் அடையாளங்களில் ஒன்றுதான். ஆனால், இந்த செல்போனை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வி.
ஒரு சராசரி இந்திய இளைஞர் ஒரு நாளைக்கு செல்போனில் நான்கு மணி நேரம் செலவிடுகிறார் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. அடுத்தவருக்கு போன் செய் வது, தனக்கு வருகிற அழைப்புகளுக்குப் பேசுவது, FM கேட்பது, SMS செய்வது செல்போனில் கேம்ஸ் விளையாடுவது, அதில் இருக்கும் வசதிகள் குறித்துத் தெரிந்துகொள்வதற்காக அதனை ஆய்வு செய்வது எனப் பல விஷயங்கள் இதில் அடக்கம்.
'செல்போன் இல்லைன்னா எனக்குக் கை ஒடிஞ்சதுபோல இருக்கும்!' என்று சொல்வது இப்போது சகஜமான டயலாக். இளைஞர்கள் என்று இல்லை; 'செல்போன் அடிக்ஷன்' என்பது அமெரிக்க அதிபர் ஒபாமா வரை நீண்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்க அதிபர் செல்போன் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், தனக்குப் பிடித்த ஒரு குறிப்பிட்ட வகை செல்போன் இல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்று அவர் சொன்னதால், பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய ஒரு செல்போன் ஒபாமாவுக்காக வடிவமைக்கப்பட்டு அவருக்குக் கொடுக் கப்பட்டுள்ளது.
'எந்தத் தொழில்நுட்பக் கருவியும், அது எந்தக் குறிப் பிட்ட தேவைக்காக உருவாக்கப்பட்டதோ, அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்' என்பார்கள். இந்திய இளைஞர்கள் மத்தியில் அது, அவ்வாறான மதிப்பீட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதே உண்மை. இல்லை என்றால் எதற்காக நான்கு மணி நேரம் தேவைப்படப்போகிறது.
அர்த்தம் இல்லாமல் பேசாதீர்கள். 'செல்போன் எவ்வளவு பயனுள்ள கருவி தெரியுமா? அதனால், எனக்கு எவ்வளவு வேலை நடக்கிறது தெரியுமா?' உண்மைதான். ஆனால், நம்மை அறியாமல் அதில் நமது நேரம் எவ்வளவு விரயமாகிறது என்ற கணக்கீடு பதற்ற மாகவே இருக்கிறது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களை ஒரு முறை பார்க்கச் சென்று இருந்தபோது, அவர் கையில் மிகச் சாதாரணமான, நவீன வசதிகள் அதிகம் இல்லாத ஒரு செல்போன் இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதுபற்றி அவரிடம் கேட்டேன் 'செல்போன் என்பது பேசுவதற்காக. அதற்கு இந்த மாடலே போதும்!' என்றார்.
சிலர் தனது செல்போனில் எதையாவது செய்துகொண்டே இருப்பார்கள். அழைப்பு வந்தாலும், வராவிட்டாலும் அதனை எடுத்துப் பார்ப்பார்கள், அதில் இருக்கிற ஒரு சிறப்பு வசதியைத் திறந்து உள்ளே போய் வருவார்கள். பேன்ட் பாக்கெட்டில் இருந்து சட்டைப் பாக்கெட்டுக்கு மாற்றுவார்கள். கையில் செல்போனை வைத்துக்கொண்டே அதைத் தேடுவார்கள்.
குளிக்கப்போகும்போது, கழிவறைக்குள் செல்லும்போது, சாப்பிடும்போது, தூங்கும்போது இப்படி எல்லா நேரங்களிலும் அது தன்னுடனேயே இருக்க வேண்டும்... இருந்தாக வேண்டும். அவசரமாக, அவசியமாக ஓர் அழைப்பை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் நிலையில், இந்த அணுகுமுறை சரிதான். ஆனால், இதுவே நிரந்தப் பழக்கமாக மாறிப்போவது செல்போன் அடிக்ஷன் என்ற மனோவியல் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. அது, செல்போன் இல்லாமல் என்னால் இயங்க முடியாது என்ற நிர்ப்பந்த நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகிறது.
முக்கியமான விஷயமாக யாருடனாவது பேசிக்கொண்டு இருக்கும்போது என் செல்போன் எங்கே இருக்கிறது? ஏதாவது அழைப்பு வந்து இருக்குமா? யாராவது SMS அனுப்பி இருக்கிறார்களா? என்னாச்சு தெரியலையே என்று மனசுக்குள் எதிர்பார்ப்பும் பதற்றமும் கலந்த எண்ண ஓட்டம் இருக்கிறது என்றால், நிச்சயமாக செல்போனிடம் நீங்கள் அடிமைப்பட்டுக்கிடக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.
தூரங்களைக் குறைக்கவும், செயல்பாடுகளின் வேகத்தை அதிகரிக்கவும் கண்டறியப்பட்ட ஒரு மிகச் சிறந்த அறிவியல் படைப்பு, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரத்தை அபகரிக் கிறது என்றால், அதைவிட ஆபத்து வேறொன்றும் இல்லை.
நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை, இந்த செல்போன் என்ற கருவி இல்லாமல்தான் நமது வேலைகள் நடந்துகொண்டு இருந்தன. ஆனால் இன்று, 'இந்திய எல்லையில் இருந்து போருக்கு வரச் சொல்லி எப்போது வேண்டு மானாலும் எனக்கு போன் வரலாம்' என்கிற மாதிரியான படபடப்போடு செல்போனையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
செல்போன் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிற ஒரு நண்பர் சொன்ன பயிற்சி இது. தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, 10 நிமிடங்கள் ஒதுக்குங்கள். உங்க ளுக்கு, அன்று காலையில் இருந்து இரவு வரை தொலைபேசி அழைப்புகள் யார், யாரி டம் இருந்து வந்திருக்கின்றன என்று பாருங் கள். அதில் எத்தனை அழைப்புகள் பயன் உள்ளவை? எத்தனை அழைப்புகள் உங்கள் நேரத்தைத் தின்றவை என்று பட்டியலிடுங்கள். அதேபோல் நீங்கள் செய்த போன் கால்களிலும் உபயோகமானவை எத்தனை, அர்த்தம் இல் லாதவை எத்தனை என்று கணக்கிடுங்கள்.
இதெல்லாம் ஒரு வேலையா என்று தோன் றும்... இருந்தாலும், தொடர்ந்து ஒரு வாரம் இதைச் செய்துபாருங்கள். இந்த வேலையைச் செய்யும்போது நமக்கே நாம் அர்த்தமற்று அரட்டை அடித்துக்கொண்டு இருந்த நேர அளவுகள் தெரிய வரும்.
'நான் ஃப்ரீயா இருந்தேன். அதான் போன் செய்தேன்... என்னடா பண்ணிட்டு இருக்கே?', 'சும்மா, ஜஸ்ட் லைக் தட் கால் பண்ணினேன்', 'ஏன்டி இந்த கிரிஜா பொண்ணு ரொம்பதான் பந்தா பண்றா!', 'செம போர் அதான்டி உனக்கு போன் பண்ணினேன்', 'எனக்கு லஞ்ச் டைம் நீ என்ன பண்றேன்னு கேட்கலாம்னுதான் போன் பண்ணினேன்', 'அந்தப் படம் செம மொக்கையாம்ல' - இப்படித் தினந்தோறும் எத்தனை அழைப்புகள் வருகின்றன என்பது கண்கூடாகத் தெரியும்.
நண்பர்கள் யாராவது சும்மா போன் பண்ணினா பேசுவது இல்லையா? அப்புறம் எதுக்கு செல்போன் என்று தோன்றலாம். இல்லை என்று மறுக்கவே இல்லை. ஆனால், 'நான் வெட்டியா இருக்கேன். அதான் உனக்கு போன் பண்ணேன்' என்று சொல் கிறவர்கள் உங்கள் நேரத்தை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். 'எனக்குப் பொழுது போகவில்லை என்றால், இவனுக்கு போன் பண்ணலாம்... பொழுதுபோகும்' என்ற எண்ணத்தை எல்லா போன் அழைப்புகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பதன் மூலம் நாமே உருவாக்குகிறோம்.
இந்த ஒரு வாரப் பயிற்சியில் உங்களை ஒரு பொழுதுபோக்குக் கருவியாகப் பயன்படுத்துபவர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கொஞ்சம் தூரத்தில் வையுங்கள். உங்களுக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுத்துப் பேச வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை.
செல்போன் என்ற கருவி உங்கள் வசதிக்கானது. உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் நேரத்தை விரயம் செய்ய ஒருவரை அனுமதிக்கிறீர்கள் என்பது உங்களை நீங்களே அவமரியாதை செய்துகொள்வதற்குச் சமம்.
இந்த ஒரு வாரப் பயிற்சிக்குப் பிறகு, யார் அழைப்புக்கு எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்பது விளங்கும். நம்மை அடுத்தவர் எப்படி அணுக வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம். ஏதோ ஒரு வேலையாக இருக்கும்போது வருகிற போன் அழைப்பைத் தேர்வு செய்து எடுப்பதற்கும், தேவையான அளவு மட்டும் பேசுவதற்கும் இந்தப் பயிற்சி உங்களுக்கு உதவலாம்.
உங்கள் வேலைக்கு உதவுகிற, வாய்ப்புகளை வழங்குகிற, உங்கள் பிரச்னைகளைத் தீர்க்கிற அழைப்புகளைத் தேர்வுசெய்து பேசுங்கள். இல்லை என்றால், நேரத்தைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் தேர்வாக நீங்கள் மாறிப்போவீர்கள்.
ஒரு கருவியின் நோக்கம் எதுவோ, அந்த நோக்கத்துக்காக மட்டும் அதைப் பயன்படுத்தும் வரை ஆபத்து இல்லை. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பணம் நேரம்தான். அதை 'தேமே' என்று செலவிடுவது நியாயமற்றது.
2011-ல் இந்திய இளைஞர்கள் எல்லார் கையிலும் செல்போன் வரட்டும். அது நம் வளர்ச்சியின் அடையாளம். அதை மிகச் சரியாகக் கையாள்வதற்கான நெறி மேலும் மேலும் வளர வேண்டும். அதுதான் நாம் மென்மேலும் வளரப்போவதற்கான அடையாளம்.
எனக்கு, உங்களுக்கு எல்லோருக்கும் நேரம் முக்கியம். கடந்துபோன நேரத்தை மீட்கும் சக்தி யாருக்கும் இல்லை. இதைப் படித்து முடித்துவிட்டு, 'கோபி இந்த வாரம் விகடன்ல செல்போன்பத்தி ஒரு கட்டுரை எழுதி இருக்காரு பார்த்தியா...' என்று செல் போனில் நீண்ட நேரம் பேசாதீர்கள். ஒரு SMS அனுப்பி ஒரு நிமிடத்தில் வேலையை முடியுங்கள்.
எந்த அறிவியல் படைப்பும்
நம்மை ஆளக் கூடாது...
நாம்தான் அதை ஆள வேண்டும்!
நீயும்... நானும்! - கோபிநாத்
அது ஆளுமைத் திறன் மேம்பாடு குறித்த ஒரு பயிற்சி வகுப்பு. என் நண்பர் ஒருவர்
மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். 1,000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்காட்டி, 'இது யாருக்கு வேண்டும்?' என்றார். எல்லோரும் கையை உயர்த்தினார்கள்.
'நிச்சயம் தருகிறேன்...' எனச் சிரித்த நண்பர், புத்தம் புதிய அந்த 1,000 ரூபாய் நோட்டை கொசகொசவெனக் கசக்கினார். குப்பைக் காகிதம்போல அதை மேடையின் ஓரத்தில் வீசினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'இப்போ சொல்லுங்க, இந்தக் கசங்கின 1,000 ரூபாய் யாருக்கு வேண்டும்?' என்றார் மறுபடியும். எல்லோரும் கை தூக்கினார்கள்.
'ஓ... அப்படியா?' என்ற நண்பரின் அடுத்த செயல் அதிர்ச்சியாக இருந்தது. கசங்கிய கரன்சியைத் தன்ஷூவால் நசுக்கித் தேய்த்தார். எல்லோரும் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள். நண்பர் இன்னும் சத்தமாகக் கேட்டார், 'யாருக்கு வேண்டும் இந்த ரூபாய்?' கூட்டத்தில் அப்போதும் எல்லோரும் கையை வேகமாக உயர்த்தினார்கள்.
நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், 'இந்த 1,000 ரூபாய் நோட்டு இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன சொல்லிக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தந்திருக்கிறது. நீங்களும் இந்த 1,000 ரூபாய் நோட்டு மாதிரிதான்!
இந்த வாழ்க்கையில் நீங்கள் பல்வேறு காரணங்களால், சூழ்நிலைகளால், எத்தனையோ அவமானங்களைச் சந்தித்து இருக்கலாம், ஏளனம் செய்யப்பட்டு இருக்கலாம், நசுக்கப்பட்டு இருக்கலாம், கசக்கித் தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். ஆனால், எது வானாலும் உங்களுக்கு மதிப்பு இல்லை, நான் எதற்கும் பயன்படாதவன் என்ற முடிவுக்கு மட்டும் வராதீர்கள்!' என்றார் புன்னகையுடன்.
'1,000 ரூபாய் நோட்டு எவ்வளவுதான் கசக்கப்பட்டாலும், நசுக்கப்பட்டாலும் அது தன் மதிப்பை இழக்கவில்லை. நீங்கள் கசங்கிய 1,000 ரூபாய் நோட்டையும் வேண்டும் என்றுதான் சொன்னீர்கள். அப்படியேதான் வாழ்க்கையும்... ஏதோ காரணத்தால் நிராகரிக்கப்பட்டாலும் உங்களுக்கான மதிப்பை நீங்கள் மதியுங்கள்!' என்பதுதான் நண்பரின் செய்தி.
நிறைய ஆளுமைப் பயிற்சி வகுப்புகளில்சொல்லப் படுகிற விஷயம்தான் இது. ஆனால், எத்தனை பேரால் இதைப் பின்பற்ற முடிகிறது என்பதுதான் கேள்வி.
நாம் நிராகரிக்கப்படுகிறபோது இரண்டு விஷயங்கள் தோன்றுவது இயற்கை. ஒன்று, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' இன்னொன்று, 'நான் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன்' என்று நினைப்பது.
எல்லோருக்குமே வாழ்க்கை எளிதாக அமைந்து விடுவது இல்லை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிற சங்கதி எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிற விஷயம்தான்!
இரண்டாவது, ரோட்டில் கிடக்கிற கல்லை யாரும் உரசிப்பார்ப்பது இல்லை, சட்டை செய்வது இல்லை. அது வைரக் கல்லாக இருந்தால், உரசிப் பார்க்கிறார்கள், உறுதியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள். நீங்கள் மதிப்பான மனிதர் என்பதால்தான் நீங்கள் கசக்கப்படுகிறீர்கள்... நசுக்கப்படுகிறீர்கள். அந்த 1,000 ரூபாய் நோட்டைப்போல அவற்றை அவமானங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
யார் மிதித்தாலும், ஏளனம் செய்தாலும், உங்கள் மதிப்பு அதன் தரத்தை இழந்துவிடப்போவது இல்லை. உங்கள் திறன் அழிந்துவிடப்போவது இல்லை. அதற்கு என்று ஒரு விலை இருக்கிறது... அதை நம்புங்கள்.
ஒருவருக்கு நன்றாகப் பாட வரும். இன்னொருவருக்கு ஓவியம் கைகூடும். நடனம் சிலருக்குச் சிறப்பாக அமையும். எந்த ஒரு திறமையாக இருந்தாலும், அடுத்தவரின் பாராட்டைப் பெற்றால்தான், அதற்கு அங்கீகாரம்கிடைக் கிறது என்பதுதான் நம் எண்ணம். ஆழமாக யோசித்தால், உண்மை அதுவல்ல; உங்கள் திறன் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுதான் அதற்கான முதல் அங்கீகாரம்.
மைக்கேல் ஜாக்சனிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் நடனத்தை உலகம் இந்த அளவுக்குப் போற்றிப் பாராட்டும் என்று நீங்கள் நம்பினீர்களா?"
அதற்கு ஜாக்சன் அளித்த பதில் சுவாரஸ்யமானது. "நிச்சயமாக நம்பினேன். காரணம், மக்கள் என் நடனத்தை அங்கீகரிப்பதற்கு முன்னதாகவே, நான் எனது நடனத்தையும் அதன் நளினத்தையும் அங்கீ கரித்து இருந்தேன்!"
'உங்கள் திறனை முதலில் நீங்கள் அங்கீகாரம் செய்யுங்கள். ஒரு பார்வையாளனாக நின்று, உங்களைப் பாராட்டவும், விமர்சிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்' என்று உளவியல் புத்தகங்கள் பேசுகின்றன. நீங்கள் திறமையானவர் என்று அடுத்தவர் அங்கீ கரிப்பதன் முதல்படி நீங்கள் உங்களை அங்கீகாரம் செய்வதில் தொடங்குகிறது.
இந்த உலகம் எந்த மனிதரின் திறனையும் உடனடியாக ஏற்றுக்கொண்டு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது இல்லை. சவால்கள், அவமானங்கள் உதாசீனங்கள், ஏளனப் பார்வைகள்... இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளைத் தாண்டியே அவர்கள் உயரத்துக்கு வந்திருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களால் எது நடந்தாலும், உங்கள் திறன் மீது நீங்கள் வைத் திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் குறைத்துக்கொள்ளாதீர்கள்.
இந்த விஷயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய இன்னொரு முக்கியமான தன்மை, நமது திறனை அங்கீகரிக்காதவர்களை, ஏளனம் செய்கிறவர்களை எதிரியாகப் பார்க்காமல் இருப்பது. அது கொஞ்சம் கஷ்டம்தான். அதற்குக் காரணமும் உண்டு. நமது திறனை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை நமக்குப் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து நாம் நினைக்கிறபடியான ஒரு பாராட்டு கிடைத்தால் மனசு குதூகலமாகிறது. இன்னமும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. இந்த விருப்பம் நியாயமானதுதான். ஆனால், பாராட்டுக்குப் பதிலாக அவமானம் கிடைத்தால் நொறுங்கிவிடுகிறோம்.
நம்மை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வெளியில் இருந்து ஓர் உந்துதல் எப்போதும் தேவைப்படுகிறது. உண்மையில், அந்த உந்துதல் நம் உள்ளுக்குள் இருந்து வர வேண்டும். என் திறன் மீது நான் வைத்திருக்கும் மதிப்பீட்டின் வெளிப்பாடாக அது வர வேண்டும். வெளியில் இருந்து கிடைக்கிற உந்துதல் எல்லாம் போனஸ்தான்.
வெளியில் இருந்து கிடைக்கிற ஊக்குவிப்பைவிட, உள்ளே இருந்து கிடைக்கும் ஊக்குவிப்பு அதிக சக்திகொண்டதாக இருக்கிறது. அது நிரந்தரமானதும்கூட. ஆனால், அது பெரும்பாலும் நடப்பது இல்லை.
நியாயமாக யோசித்துப்பாருங்கள்... வெளியில் இருக்கிற ஒரு மனிதர் நம் திறனை மதித்து நம்மைப் பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அதே வேலையை நமக்கு நாமே செய்துகொள்வது சிரமமா என்ன?
நமது திறனை நாம் மதித்தால், இந்த உலகமும் அதை ஒருநாள் மதிக்கும். நமது அறிவை நாமே சந்தேகித்தால், இந்த உலகமும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்.
நாம் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் நோட்டுதான்!
மேடையில் பேசிக்கொண்டு இருந்தார். 1,000 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்காட்டி, 'இது யாருக்கு வேண்டும்?' என்றார். எல்லோரும் கையை உயர்த்தினார்கள்.
'நிச்சயம் தருகிறேன்...' எனச் சிரித்த நண்பர், புத்தம் புதிய அந்த 1,000 ரூபாய் நோட்டை கொசகொசவெனக் கசக்கினார். குப்பைக் காகிதம்போல அதை மேடையின் ஓரத்தில் வீசினார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 'இப்போ சொல்லுங்க, இந்தக் கசங்கின 1,000 ரூபாய் யாருக்கு வேண்டும்?' என்றார் மறுபடியும். எல்லோரும் கை தூக்கினார்கள்.
'ஓ... அப்படியா?' என்ற நண்பரின் அடுத்த செயல் அதிர்ச்சியாக இருந்தது. கசங்கிய கரன்சியைத் தன்ஷூவால் நசுக்கித் தேய்த்தார். எல்லோரும் கொஞ்சம் குழப்பமாகப் பார்த்தார்கள். நண்பர் இன்னும் சத்தமாகக் கேட்டார், 'யாருக்கு வேண்டும் இந்த ரூபாய்?' கூட்டத்தில் அப்போதும் எல்லோரும் கையை வேகமாக உயர்த்தினார்கள்.
நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், 'இந்த 1,000 ரூபாய் நோட்டு இதுவரை உங்கள் வாழ்க்கையில் என்ன சொல்லிக் கொடுத்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது ஒரு நல்ல வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தந்திருக்கிறது. நீங்களும் இந்த 1,000 ரூபாய் நோட்டு மாதிரிதான்!
இந்த வாழ்க்கையில் நீங்கள் பல்வேறு காரணங்களால், சூழ்நிலைகளால், எத்தனையோ அவமானங்களைச் சந்தித்து இருக்கலாம், ஏளனம் செய்யப்பட்டு இருக்கலாம், நசுக்கப்பட்டு இருக்கலாம், கசக்கித் தூக்கி எறியப்பட்டு இருக்கலாம். ஆனால், எது வானாலும் உங்களுக்கு மதிப்பு இல்லை, நான் எதற்கும் பயன்படாதவன் என்ற முடிவுக்கு மட்டும் வராதீர்கள்!' என்றார் புன்னகையுடன்.
'1,000 ரூபாய் நோட்டு எவ்வளவுதான் கசக்கப்பட்டாலும், நசுக்கப்பட்டாலும் அது தன் மதிப்பை இழக்கவில்லை. நீங்கள் கசங்கிய 1,000 ரூபாய் நோட்டையும் வேண்டும் என்றுதான் சொன்னீர்கள். அப்படியேதான் வாழ்க்கையும்... ஏதோ காரணத்தால் நிராகரிக்கப்பட்டாலும் உங்களுக்கான மதிப்பை நீங்கள் மதியுங்கள்!' என்பதுதான் நண்பரின் செய்தி.
நிறைய ஆளுமைப் பயிற்சி வகுப்புகளில்சொல்லப் படுகிற விஷயம்தான் இது. ஆனால், எத்தனை பேரால் இதைப் பின்பற்ற முடிகிறது என்பதுதான் கேள்வி.
நாம் நிராகரிக்கப்படுகிறபோது இரண்டு விஷயங்கள் தோன்றுவது இயற்கை. ஒன்று, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' இன்னொன்று, 'நான் அவமானப்படுத்தப்பட்டுவிட்டேன்' என்று நினைப்பது.
எல்லோருக்குமே வாழ்க்கை எளிதாக அமைந்து விடுவது இல்லை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிற சங்கதி எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிற விஷயம்தான்!
இரண்டாவது, ரோட்டில் கிடக்கிற கல்லை யாரும் உரசிப்பார்ப்பது இல்லை, சட்டை செய்வது இல்லை. அது வைரக் கல்லாக இருந்தால், உரசிப் பார்க்கிறார்கள், உறுதியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்கள். நீங்கள் மதிப்பான மனிதர் என்பதால்தான் நீங்கள் கசக்கப்படுகிறீர்கள்... நசுக்கப்படுகிறீர்கள். அந்த 1,000 ரூபாய் நோட்டைப்போல அவற்றை அவமானங்களாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
யார் மிதித்தாலும், ஏளனம் செய்தாலும், உங்கள் மதிப்பு அதன் தரத்தை இழந்துவிடப்போவது இல்லை. உங்கள் திறன் அழிந்துவிடப்போவது இல்லை. அதற்கு என்று ஒரு விலை இருக்கிறது... அதை நம்புங்கள்.
ஒருவருக்கு நன்றாகப் பாட வரும். இன்னொருவருக்கு ஓவியம் கைகூடும். நடனம் சிலருக்குச் சிறப்பாக அமையும். எந்த ஒரு திறமையாக இருந்தாலும், அடுத்தவரின் பாராட்டைப் பெற்றால்தான், அதற்கு அங்கீகாரம்கிடைக் கிறது என்பதுதான் நம் எண்ணம். ஆழமாக யோசித்தால், உண்மை அதுவல்ல; உங்கள் திறன் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பீடுதான் அதற்கான முதல் அங்கீகாரம்.
மைக்கேல் ஜாக்சனிடம் ஒரு நிருபர் கேட்டார், "உங்கள் நடனத்தை உலகம் இந்த அளவுக்குப் போற்றிப் பாராட்டும் என்று நீங்கள் நம்பினீர்களா?"
அதற்கு ஜாக்சன் அளித்த பதில் சுவாரஸ்யமானது. "நிச்சயமாக நம்பினேன். காரணம், மக்கள் என் நடனத்தை அங்கீகரிப்பதற்கு முன்னதாகவே, நான் எனது நடனத்தையும் அதன் நளினத்தையும் அங்கீ கரித்து இருந்தேன்!"
'உங்கள் திறனை முதலில் நீங்கள் அங்கீகாரம் செய்யுங்கள். ஒரு பார்வையாளனாக நின்று, உங்களைப் பாராட்டவும், விமர்சிக்கவும் பழகிக்கொள்ளுங்கள்' என்று உளவியல் புத்தகங்கள் பேசுகின்றன. நீங்கள் திறமையானவர் என்று அடுத்தவர் அங்கீ கரிப்பதன் முதல்படி நீங்கள் உங்களை அங்கீகாரம் செய்வதில் தொடங்குகிறது.
இந்த உலகம் எந்த மனிதரின் திறனையும் உடனடியாக ஏற்றுக்கொண்டு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது இல்லை. சவால்கள், அவமானங்கள் உதாசீனங்கள், ஏளனப் பார்வைகள்... இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளைத் தாண்டியே அவர்கள் உயரத்துக்கு வந்திருக்கிறார்கள். மேற்சொன்ன விஷயங்களால் எது நடந்தாலும், உங்கள் திறன் மீது நீங்கள் வைத் திருக்கும் நம்பிக்கையையும் மதிப்பையும் குறைத்துக்கொள்ளாதீர்கள்.
இந்த விஷயத்தில் நாம் பின்பற்ற வேண்டிய இன்னொரு முக்கியமான தன்மை, நமது திறனை அங்கீகரிக்காதவர்களை, ஏளனம் செய்கிறவர்களை எதிரியாகப் பார்க்காமல் இருப்பது. அது கொஞ்சம் கஷ்டம்தான். அதற்குக் காரணமும் உண்டு. நமது திறனை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைப் பாராட்ட வேண்டும் என்கிற ஆசை நமக்குப் பழக்கப்படுத்தப்பட்ட ஒன்று. வெளியில் இருந்து நாம் நினைக்கிறபடியான ஒரு பாராட்டு கிடைத்தால் மனசு குதூகலமாகிறது. இன்னமும் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகமாகிறது. இந்த விருப்பம் நியாயமானதுதான். ஆனால், பாராட்டுக்குப் பதிலாக அவமானம் கிடைத்தால் நொறுங்கிவிடுகிறோம்.
நம்மை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வெளியில் இருந்து ஓர் உந்துதல் எப்போதும் தேவைப்படுகிறது. உண்மையில், அந்த உந்துதல் நம் உள்ளுக்குள் இருந்து வர வேண்டும். என் திறன் மீது நான் வைத்திருக்கும் மதிப்பீட்டின் வெளிப்பாடாக அது வர வேண்டும். வெளியில் இருந்து கிடைக்கிற உந்துதல் எல்லாம் போனஸ்தான்.
வெளியில் இருந்து கிடைக்கிற ஊக்குவிப்பைவிட, உள்ளே இருந்து கிடைக்கும் ஊக்குவிப்பு அதிக சக்திகொண்டதாக இருக்கிறது. அது நிரந்தரமானதும்கூட. ஆனால், அது பெரும்பாலும் நடப்பது இல்லை.
நியாயமாக யோசித்துப்பாருங்கள்... வெளியில் இருக்கிற ஒரு மனிதர் நம் திறனை மதித்து நம்மைப் பாராட்ட வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அதே வேலையை நமக்கு நாமே செய்துகொள்வது சிரமமா என்ன?
நமது திறனை நாம் மதித்தால், இந்த உலகமும் அதை ஒருநாள் மதிக்கும். நமது அறிவை நாமே சந்தேகித்தால், இந்த உலகமும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கும்.
நாம் ஒவ்வொருவரும் 1,000 ரூபாய் நோட்டுதான்!
நீயும்... நானும்! - கோபிநாத்
கல்லூரிகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ, பயிற்சி வகுப்புகளுக்கோ செல்கிறபோது
அடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்பது உண்டு. ரொம்ப எளிதானதுதான். உலகிலேயே அதிகமான மக்கள்தொகைகொண்ட நாடு எது? - எல்லாரும் கோரஸாகச் சொல்வார்கள் சீனா என்று.
அடுத்த கேள்வி - உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகைகொண்ட தேசம் எது? - உடனே பதில் வரும் 'இந்தியா'.
மூன்றாவது கேள்வி - இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எது? இப்போது பல்வேறு விதமான பதில்கள்.
ரஷ்யா, பிரேசில், பாகிஸ்தான், ஜெர்மனி, இந்தோனேஷியா, அமெரிக்கா. ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வார்கள்.
நீங்களும் வேண்டுமானால் எங்காவது கேட்டுப்பாருங்கள். 10 பேர் இருக்கும் இடத்தில் அநேகமாக ஒருவரோ, இருவரோதான் சரியாகப் பதில் சொல்வார்கள். 'அமெரிக்கா' என்று பதில் சொல்ல முடியாத அளவுக்கு இது கடினமான கேள்வி ஒன்றும் இல்லை. ஆனாலும், அந்தக் கேள்விக்கான பதிலை நாம் தேடுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கேள்வியையே எழுப்புவது இல்லை.
உலகிலேயே அதிக மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். அடுத்தது நாம் இருக்கிறோம். அப்புறம் என்ன போதும்... போதும் இதற்கு மேல் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று இருந்துவிடுகிறோம். இந்த விஷயம்தான் என்றில்லை, எந்த ஒரு தகவலும் நமக்கென்று எல்லைக் கோடு. அந்தக் கோட்டைத் தாண்டுவதே இல்லை.
அறிதலிலும் தேடலிலும் அளவுகோல் எதற்கு? தெரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் ஒரு தொடர் பயணம். நான், நீங்கள் என நம்மில் பலரும் இந்தப் பயணத்தில் நம்மால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அதில் பாதி வேகத்தில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 'இது போதும்' என்று மனசுக்குள் எங்கேயோ மணி அடித்துவிடுகிறது.
என் செல்போனில் ஒரு பிரச்னை. எனக்குத் தெரிந்த செல்போன் விற்கும் கடை ஒன்றுக்குப் போனேன். இதைச் சரிசெய்ய சர்வீஸ் சென்டருக்குத்தான் போக வேண்டும் என்றார், அந்தக் கடையில் இருந்த நண்பர். அது வெகுதொலைவில் இருந்ததால், அருகில் எங்கேயாவது இதைச் சரிசெய்ய முடியுமா என்று கேட்டேன். இங்கே பக்கத்தில் போன் ரிப்பேர் பண்ணும் கடை எதுவும் இல்லை என்றார்.
என்ன செய்வது என்று தெரியாமல் கடையில் இருந்து வெளியே வந்து, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நண்பரின் கடையில் இருந்து சில கடைகள் தள்ளி போனைப் பழுதுபார்த்துத் தருகிற கடை இருந்தது. உடனே, நண்பருக்கு போன் செய்து "என்னங்க, பழுதுபார்க்கும் கடை இந்தப் பகுதியிலேயே இல்லை என்றீர்கள். இங்கே, பக்கத்திலேயே ஒரு கடை இருக்கிறதே" என்று கேட்டேன்.
அவரும் ஆச்சர்யமாக அப்படியா என்றார். ஸாரிங்க, நான் கவனித்ததில்லை என்று விளக்கம் சொன்னார். இத்தனைக்கும் அவர் தினமும் பயணிக்கிற பகுதி அது. 'என் வேலை போன் விற்பது. அவ்வளவுதான்' என்கிற எண்ணமே அது தொடர்பான இன்ன பிற விஷயங்களைத் தேடுகிற தாகத்தைத் தடை செய்துவைத்துஇருக்கிறது. என் துறையோடு தொடர்புடைய ஏனைய தகவல்களைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டியதும், புரிந்துகொள்ள வேண்டியதும் கூடுதல் வேலை என்று நினைப்பதால்தான் அந்த ஆர்வம் இருப்பது இல்லை.
இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்வது சாத்தியம் இல்லாமல் போகலாம். குறைந்தபட்சம் நாம் இருக்கிற அல்லது நம்மை ஈர்க்கிற விஷயத்தோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் தேடுவதுதான் நம்மை உயரத்துக்குக் கொண்டுபோகிறது.
அந்தத் தேடல்தான் நமக்குப் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உங்களைத் தனிச் சிறப்பு பெற்ற மனிதராக அடையாளம் காட்டுகிறது. வாய்ப்புகளை உங்கள் வாசலில் வந்து கொட்டுகிறது. இவை எல்லாவற்றையும் விட, ஆத்ம திருப்தியைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
நான் பணி செய்யும் ஊடகத் துறையிலும் அப்படியான மனிதர்களைப் பார்த்து நான் வியந்தது உண்டு. எனது நண்பர் ஒருவர், ஒரு படைப்பு தொடர்பான அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பார். ஒரு நிகழ்ச்சிக்கான களத்தை உருவாக்குவதில் தொடங்கி, தொழில்நுட்பரீதியாக அதைச் செம்மைப்படுத்துவது வரை அத்தனையும் அவருக்கு அத்துப்படி.
அவரைப் பார்க்கிறபோது ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கும். அவர் சொல்கிற விஷயத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். இங்கு கவனிக்கத்தக்க மாற்றங்களைச் செய்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு முறையும் தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடியவர்கள்தான். அப்படி ஓடுவதற்கான ஆர்வம் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதன் மூலமே கிடைக்கிறது. புதுப்பித்தல் என்பது 'தேடல்' மூலமே நடக்கிறது.
இந்தத் தேடல்தான் நம்மை முழுமையான மனிதன் ஆக்குகிறது. முழுமையான மனிதன் பல புதிய படைப்புகளை உலகுக்கு முன்வைக்கிறான். பலருக்கும் முன்னுதாரணமாக நிற்கிறான். நாம் நேசிக்கிற, பழிக்கிற மனிதர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் துறையில் பாண்டித்யம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.
என் வேலை கேஷியர். எனக்குப் பணம் எண்ணத்தான் தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால், உங்களைவிட வேகமாக பணம் எண்ணத் தெரிந்தவர் வந்தால் உங்கள் இடம் பறி போகும். நீங்கள் வங்கியில் இருந்தால் வங்கிச் சேவைகள், பணிகள் குறித்த தகவல்கள் உங்கள் விரல் நுனியில் இருக்கட்டும்.
தொடர்புத் தகவல்களைத் தேடுவது நமது பார்வையை விசாலமாக்குகிறது. இதில் புதிதாக என்ன செய்யலாம் என்று தூண்டுகிறது. போதும்... போதும்... என் வேலை எனக்குத் தெரியும் என்ற 'போதும் மனோபாவம்' நமது அறிவின் வேகத்தையும் ஆற்றலையும் முடக்கிப் போடுகிறது.
தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தொழிலதிபர் எனது நண்பர். போன வாரம் அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு தகவல் சொன்னார். "ஒருவர் மிகச் சிறந்த மனிதர் ஆவதைத் தடுப்பது அவருடைய மோசமான செய்கைகள் அல்ல; நான் 'சிறந்தது' என்ற இடத்துக்கு வந்துவிட்டேன், அது போதும் என்ற நினைப்புதான்."
எட்டாவது மாடிக்கு ஏறிப் போகிற எல்லா வாய்ப்பும் இருந்தும், மூன்றாவது மாடியின் பால்கனியில் காற்று வாங்கியே காலம் கழித்துவிடுகிறோம். இதில் எட்டாவது மாடி என்பது ஒரு துறையின் உச்சத்தைத் தொடுவதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்வது. மூன்றாவது மாடி என்பது இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையோடு நேரடித் தொடர்பில் இருக்கும் விஷயத்தை மட்டும் தெரிந்துகொண்டு முடங்கிவிடுவது.
கடவுளோ, இயற்கையோ, நம்மைப் படைத்தது எதுவாக இருந்தாலும், நமக்கென்று ஒரு சிறப்புத் தகுதியோடுதான் படைக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாய்ப்பை மரியாதை செய்யத் தொடர்ந்து தேட வேண்டியது முக்கியமாகிறது.
விஜய் டி.வி. வழங்கும் விருதுகளில், செவாலியே சிவாஜி கணேசன் விருது இந்த முறை ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு நடிகர் திலகத்தின் இல்லத்திலேயே நடந்தது.
அங்கு அவரிடம் சில கேள்விகள் கேட்கிற வாய்ப்பும் இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, நடிகர் திலகம் இல்லத்தில் ஓர் அறையில் இருந்த ரஜினிகாந்த் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். 15 நிமிடங்கள் என்னோடு பேசினார். எந்த அலங்காரங்களும் இல்லாத இயல்பான பெருந்தன்மை அதில் இருந்தது.
"நீங்க சிவாஜி சார் பற்றிப் பேசியவிதமும் உங்க மொழி நடையும் எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஷயத்தைக் கொடுத்திருக்கார்... உங்ககிட்ட ஒரு விஷயம் தந்திருக்கார்... நீங்க அதுக்கு விசுவாசமா இருக்கணும். இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு நீங்க பேசினதைக் கேட்டாலும் எனக்குப் பிரமிப்பா இருக்கணும். அதுக்கு ஏதாச்சும் தேடிக்கிட்டே இருங்க" என்றார்.
இயற்கையும் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றைத் தந்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு முழு மனிதனாக உருவெடுக்க வேண்டியதுதான் நமது வேலை.
என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று... ரஜினி அவர்கள் என்னை அழைத்துப் பேசியது. நாம் யாருமே மறந்துவிடக் கூடாத ஒரு விஷயம்... அவர் சொன்னது.
'தேடிக்கொண்டே இருப்போம், திசைகள் எல்லாம்!
அடிக்கடி இந்தக் கேள்வியைக் கேட்பது உண்டு. ரொம்ப எளிதானதுதான். உலகிலேயே அதிகமான மக்கள்தொகைகொண்ட நாடு எது? - எல்லாரும் கோரஸாகச் சொல்வார்கள் சீனா என்று.
அடுத்த கேள்வி - உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகைகொண்ட தேசம் எது? - உடனே பதில் வரும் 'இந்தியா'.
மூன்றாவது கேள்வி - இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக மக்கள்தொகைகொண்ட நாடு எது? இப்போது பல்வேறு விதமான பதில்கள்.
ரஷ்யா, பிரேசில், பாகிஸ்தான், ஜெர்மனி, இந்தோனேஷியா, அமெரிக்கா. ஆளாளுக்கு ஒரு பதில் சொல்வார்கள்.
நீங்களும் வேண்டுமானால் எங்காவது கேட்டுப்பாருங்கள். 10 பேர் இருக்கும் இடத்தில் அநேகமாக ஒருவரோ, இருவரோதான் சரியாகப் பதில் சொல்வார்கள். 'அமெரிக்கா' என்று பதில் சொல்ல முடியாத அளவுக்கு இது கடினமான கேள்வி ஒன்றும் இல்லை. ஆனாலும், அந்தக் கேள்விக்கான பதிலை நாம் தேடுவது இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கேள்வியையே எழுப்புவது இல்லை.
உலகிலேயே அதிக மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். அடுத்தது நாம் இருக்கிறோம். அப்புறம் என்ன போதும்... போதும் இதற்கு மேல் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம் என்று இருந்துவிடுகிறோம். இந்த விஷயம்தான் என்றில்லை, எந்த ஒரு தகவலும் நமக்கென்று எல்லைக் கோடு. அந்தக் கோட்டைத் தாண்டுவதே இல்லை.
அறிதலிலும் தேடலிலும் அளவுகோல் எதற்கு? தெரிந்துகொள்வதும், புரிந்துகொள்வதும் ஒரு தொடர் பயணம். நான், நீங்கள் என நம்மில் பலரும் இந்தப் பயணத்தில் நம்மால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ, அதில் பாதி வேகத்தில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறோம். 'இது போதும்' என்று மனசுக்குள் எங்கேயோ மணி அடித்துவிடுகிறது.
என் செல்போனில் ஒரு பிரச்னை. எனக்குத் தெரிந்த செல்போன் விற்கும் கடை ஒன்றுக்குப் போனேன். இதைச் சரிசெய்ய சர்வீஸ் சென்டருக்குத்தான் போக வேண்டும் என்றார், அந்தக் கடையில் இருந்த நண்பர். அது வெகுதொலைவில் இருந்ததால், அருகில் எங்கேயாவது இதைச் சரிசெய்ய முடியுமா என்று கேட்டேன். இங்கே பக்கத்தில் போன் ரிப்பேர் பண்ணும் கடை எதுவும் இல்லை என்றார்.
என்ன செய்வது என்று தெரியாமல் கடையில் இருந்து வெளியே வந்து, வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். நண்பரின் கடையில் இருந்து சில கடைகள் தள்ளி போனைப் பழுதுபார்த்துத் தருகிற கடை இருந்தது. உடனே, நண்பருக்கு போன் செய்து "என்னங்க, பழுதுபார்க்கும் கடை இந்தப் பகுதியிலேயே இல்லை என்றீர்கள். இங்கே, பக்கத்திலேயே ஒரு கடை இருக்கிறதே" என்று கேட்டேன்.
அவரும் ஆச்சர்யமாக அப்படியா என்றார். ஸாரிங்க, நான் கவனித்ததில்லை என்று விளக்கம் சொன்னார். இத்தனைக்கும் அவர் தினமும் பயணிக்கிற பகுதி அது. 'என் வேலை போன் விற்பது. அவ்வளவுதான்' என்கிற எண்ணமே அது தொடர்பான இன்ன பிற விஷயங்களைத் தேடுகிற தாகத்தைத் தடை செய்துவைத்துஇருக்கிறது. என் துறையோடு தொடர்புடைய ஏனைய தகவல்களைத் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டியதும், புரிந்துகொள்ள வேண்டியதும் கூடுதல் வேலை என்று நினைப்பதால்தான் அந்த ஆர்வம் இருப்பது இல்லை.
இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்வது சாத்தியம் இல்லாமல் போகலாம். குறைந்தபட்சம் நாம் இருக்கிற அல்லது நம்மை ஈர்க்கிற விஷயத்தோடு தொடர்புடைய அனைத்து விஷயங்களையும் தேடுவதுதான் நம்மை உயரத்துக்குக் கொண்டுபோகிறது.
அந்தத் தேடல்தான் நமக்குப் பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் உங்களைத் தனிச் சிறப்பு பெற்ற மனிதராக அடையாளம் காட்டுகிறது. வாய்ப்புகளை உங்கள் வாசலில் வந்து கொட்டுகிறது. இவை எல்லாவற்றையும் விட, ஆத்ம திருப்தியைக் கொண்டுவந்து சேர்க்கிறது.
நான் பணி செய்யும் ஊடகத் துறையிலும் அப்படியான மனிதர்களைப் பார்த்து நான் வியந்தது உண்டு. எனது நண்பர் ஒருவர், ஒரு படைப்பு தொடர்பான அனைத்தையும் தெரிந்துவைத்திருப்பார். ஒரு நிகழ்ச்சிக்கான களத்தை உருவாக்குவதில் தொடங்கி, தொழில்நுட்பரீதியாக அதைச் செம்மைப்படுத்துவது வரை அத்தனையும் அவருக்கு அத்துப்படி.
அவரைப் பார்க்கிறபோது ஆச்சர்யமாகவும் பொறாமையாகவும் இருக்கும். அவர் சொல்கிற விஷயத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றும். இங்கு கவனிக்கத்தக்க மாற்றங்களைச் செய்தவர்கள் எல்லோரும் ஒவ்வொரு முறையும் தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடியவர்கள்தான். அப்படி ஓடுவதற்கான ஆர்வம் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்வதன் மூலமே கிடைக்கிறது. புதுப்பித்தல் என்பது 'தேடல்' மூலமே நடக்கிறது.
இந்தத் தேடல்தான் நம்மை முழுமையான மனிதன் ஆக்குகிறது. முழுமையான மனிதன் பல புதிய படைப்புகளை உலகுக்கு முன்வைக்கிறான். பலருக்கும் முன்னுதாரணமாக நிற்கிறான். நாம் நேசிக்கிற, பழிக்கிற மனிதர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்கள் தங்கள் துறையில் பாண்டித்யம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.
என் வேலை கேஷியர். எனக்குப் பணம் எண்ணத்தான் தெரியும் என்று சொல்லிக்கொண்டு இருந்தால், உங்களைவிட வேகமாக பணம் எண்ணத் தெரிந்தவர் வந்தால் உங்கள் இடம் பறி போகும். நீங்கள் வங்கியில் இருந்தால் வங்கிச் சேவைகள், பணிகள் குறித்த தகவல்கள் உங்கள் விரல் நுனியில் இருக்கட்டும்.
தொடர்புத் தகவல்களைத் தேடுவது நமது பார்வையை விசாலமாக்குகிறது. இதில் புதிதாக என்ன செய்யலாம் என்று தூண்டுகிறது. போதும்... போதும்... என் வேலை எனக்குத் தெரியும் என்ற 'போதும் மனோபாவம்' நமது அறிவின் வேகத்தையும் ஆற்றலையும் முடக்கிப் போடுகிறது.
தொலைநோக்குப் பார்வைகொண்ட ஒரு தொழிலதிபர் எனது நண்பர். போன வாரம் அவரைப் பார்க்கச் சென்றபோது ஒரு தகவல் சொன்னார். "ஒருவர் மிகச் சிறந்த மனிதர் ஆவதைத் தடுப்பது அவருடைய மோசமான செய்கைகள் அல்ல; நான் 'சிறந்தது' என்ற இடத்துக்கு வந்துவிட்டேன், அது போதும் என்ற நினைப்புதான்."
எட்டாவது மாடிக்கு ஏறிப் போகிற எல்லா வாய்ப்பும் இருந்தும், மூன்றாவது மாடியின் பால்கனியில் காற்று வாங்கியே காலம் கழித்துவிடுகிறோம். இதில் எட்டாவது மாடி என்பது ஒரு துறையின் உச்சத்தைத் தொடுவதற்கான தகவல்களைத் தெரிந்துகொள்வது. மூன்றாவது மாடி என்பது இப்போது செய்துகொண்டு இருக்கும் வேலையோடு நேரடித் தொடர்பில் இருக்கும் விஷயத்தை மட்டும் தெரிந்துகொண்டு முடங்கிவிடுவது.
கடவுளோ, இயற்கையோ, நம்மைப் படைத்தது எதுவாக இருந்தாலும், நமக்கென்று ஒரு சிறப்புத் தகுதியோடுதான் படைக்கப்பட்டு இருக்கிறோம். அப்படி நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் வாய்ப்பை மரியாதை செய்யத் தொடர்ந்து தேட வேண்டியது முக்கியமாகிறது.
விஜய் டி.வி. வழங்கும் விருதுகளில், செவாலியே சிவாஜி கணேசன் விருது இந்த முறை ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்வு நடிகர் திலகத்தின் இல்லத்திலேயே நடந்தது.
அங்கு அவரிடம் சில கேள்விகள் கேட்கிற வாய்ப்பும் இருந்தது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, நடிகர் திலகம் இல்லத்தில் ஓர் அறையில் இருந்த ரஜினிகாந்த் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள். 15 நிமிடங்கள் என்னோடு பேசினார். எந்த அலங்காரங்களும் இல்லாத இயல்பான பெருந்தன்மை அதில் இருந்தது.
"நீங்க சிவாஜி சார் பற்றிப் பேசியவிதமும் உங்க மொழி நடையும் எனக்கு பிரமிப்பா இருந்துச்சு. ஆண்டவன் ஒவ்வொருத்தருக்கும் ஒரு விஷயத்தைக் கொடுத்திருக்கார்... உங்ககிட்ட ஒரு விஷயம் தந்திருக்கார்... நீங்க அதுக்கு விசுவாசமா இருக்கணும். இன்னும் எத்தனை வருஷம் கழிச்சு நீங்க பேசினதைக் கேட்டாலும் எனக்குப் பிரமிப்பா இருக்கணும். அதுக்கு ஏதாச்சும் தேடிக்கிட்டே இருங்க" என்றார்.
இயற்கையும் கடவுளும் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்றைத் தந்திருக்கிறார். அதை வைத்துக்கொண்டு முழு மனிதனாக உருவெடுக்க வேண்டியதுதான் நமது வேலை.
என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று... ரஜினி அவர்கள் என்னை அழைத்துப் பேசியது. நாம் யாருமே மறந்துவிடக் கூடாத ஒரு விஷயம்... அவர் சொன்னது.
'தேடிக்கொண்டே இருப்போம், திசைகள் எல்லாம்!
நீயும்... நானும்! - கோபிநாத்
தன்னை அவமானப்படுத்திய எதிரியிடம் கோபம் கொப்பளிக்க ஹீரோ சொல்வார்,
'இந்த நிமிஷத்துல இருந்து நீ எனக்கு எதிரி. உன்னை ஒழித்துவிட்டுத்தான் என் அடுத்த வேலை' என்பார். தியேட்டரில் கை தட்டல் சத்தம் காதைப் பிளக்கும். ஆத்திரத்திலும் கோபத்திலும் ஹீரோ எடுக்கும் முடிவை அனைவரும் ஆர்வத்தோடு வரவேற்கிறோம்.
கோபப்பட்டு உணர்ச்சிபூர்வமாகி எடுக்கப்படும் முடிவுகளில் ஒரு ஹீரோயிசமும், அதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்தும் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறோம். சினிமாவில் சரி, நிஜ வாழ்க்கையில் கோபத்தில் எடுக்கும் முடிவுகளும் தீர்மானங்களும் சரியாக இருக்குமா? அந்தக் கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள், ஆய்வுகள் அற்ற... புரிதல் அற்ற அந்தத் தீர்மானம் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்?
ஆனாலும், பல முடிவுகள் கோபத்திலும் அது தரும் உந்துதலிலும்தான் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இங்கு பல கதைகளும் உண்டு. கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாமும் பல நேரங்களில் அத்தகைய முடிவுகளை எடுத்து சூடு போட்டுக்கொண்டது ஞாபத்துக்கு வரலாம்.
கோபம்பற்றிப் பல்வேறு விதமான பார்வைகள் உண்டு. அவரவரின் அனுபவம், சுற்றுச்சூழல், சமூக அழுத்தம் இப்படிப் பல காரணிகளைப் பொறுத்து அந்தப் பார்வைகள் அமையும். கோபமே படக் கூடாது. சாந்தமாக இருங்கள். கோபப்படலேன்னா வேலை நடக்காது. சரியான இடத்துல, சரியான நேரத்துல கோபப்படணும் - கோபப்படலாம். ஆனா, அதை வெளிப்படுத்தக் கூடாது - கோபத்தை வெளிப்படுத்தலேன்னா அது மனசுக்குள் தங்கிச் சிக்கலை உண்டாக்கிவிடும் - இப்படி நிறையப் பார்வைகள்.
கோபம், சுயநலத்தின் வெளிப்பாடு என்று ஒரு பார்வையும் உண்டு. அவன் மேல எனக்கு செம கடுப்பு. ஆத்திரம்னா அவ்வளவு ஆத்திரம். போனைப் போட்டு திட்டுதிட்டுனு திட்டித் தீர்த்துட்டேன். இப்போதான் மனசு நிம்மதியா இருக்கு என்று சிலர் சொல்வார்கள். அடுத்தவரின் மனநிலையும் சூழலும் என்ன என்ற கவலைகள் எதுவும் இன்றி என் கோபத்தைக் கொட்டியாயிற்று.
கோபத்திலும் 'காரியக்கார' கோபம் ஒன்று உண்டு. எவரால் தனக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாதோ, அவருக்கு எதிராகச் சேர்த்துவைத்திருக்கும் ஆத்திரம் அனைத்தும் அனலாகக் கொப்பளிக்கிற உத்தி அது.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எதாவது கோபத்தில் இருந்தால், போனை எடுத்து எடுத்துப் பார்ப்பார். ஏன் இப்படிச் செய்கிறார் என்று ஒருநாள் விசாரித்தேன். 'அது ஒண்ணுமில்லை... நான் கோபமாக இருக்கிற நேரத்தில் கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வேணுமா என்று முகம் தெரியாத ஆட்கள் போன் செய்தால், அவர்களைத் திட்டுத் திட்டு என்று திட்டித் தீர்ப்பேன். எனக்கு மனசுல இருக்கற பாரம் எல்லாம் குறைந்துபோகும். அதான்' என்றார்.
எதிர்ப்பதற்கு வலு இல்லாத, முகம் தெரியாத மனிதர்களிடம் கோபத்தைக் காட்டுவது அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கான வடிகால் என்று அதை ஓர் உத்தியாகக் கையாளுகிற புத்திசாலி கோபக்காரர்கள் நிறைய உண்டு. கஸ்டமர் சர்வீஸில் இருந்து போன் செய்தவர், போனை வைத்தபிறகு அநேகமாக ஆபீஸ் பையனை அழைத்து காட்டுக் கத்தல் கத்தியிருப்பார்.
ஒரு தனி மனிதரின் கோபம் அவரோடு நின்றுவிடுவது இல்லை. அது ஒரு சங்கிலித் தொடர்போல நிறையப் பேருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. நிறைய மனங்களைக் காயப்படுத்துகிறது. தன் கோபத்தை வெளிப்படுத்த வலு இல்லாத ஒரு எதிராளியைத் தேடுகிற காரியக்கார கோபவாதிகளாகத்தான் நிறையப் பேர் இருக்கிறோம்.
மேலதிகாரி தன்னிடம் காட்டிய கோபத்தை அப்பா, அம்மா மீது காட்டுகிறார். அம்மா, பிள்ளை மீது காட்டுகிறார். அந்தப் பிள்ளை, தன் தம்பி மீதோ, தங்கை மீதோ காட்டுகிறார். அவர் அந்தக் கோபத்தைத் தன் நண்பரிடம் வெளிப்படுத்துகிறார். அவர் தன் ஆத்திரத்தை இன்னொருவரிடம் கொட்டுகிறார். அந்த இன்னொருவர் தன் கோபத்தை வெளிப்படுத்த, அடுத்த ஆளைத் தேடுகிறார்.
உங்கள் ஒருவரின் கோபம் உங்களைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல; உங்களோடு தொடர்பில் இல்லாத பலரையும் சங்கடத்துக்கு ஆளாக்குகிறது. கோபம்பற்றி இவ்வளவு ஆராய வேண்டாம்... கோபம் வந்தால் யாரையாவது பிடிச்சுத் திட்ட வேண்டியதுதான். அப்புறம் மன்னிப்பு கேட்டுக்கலாம் என்ற மனோபாவமும் உண்டு. மன்னிப்புக் கேட்பதால், உங்கள் மனசு சாந்தம் அடையலாம். ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
கோபம்பற்றி பிரபலமான ஒரு கதை உண்டு. நீங்களும் கேள்விப்பட்டு இருக் கலாம். ஒரு பையனுக்கு பயங்கரமான கோபம் வருமாம். ஆத்திரம் வந்தால் அனைவரையும் திட்டித் தீர்ப்பார். அவரது கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் அப்பா ஓர் உத்தி சொன்னார்... 'உனக்குக் கோபம் வரும்போது எல்லாம் வீட்டின் பின்பக்கத்தில் இருக்கிற மரப்பலகையில் ஒரு ஆணி அடித்து வை' என்றார். மகனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். கோபம் வருகிறபோது எல்லாம் சுத்தியலையும் ஆணியையும் எடுத்துக்கொண்டு மரப்பலகையை நோக்கிக் கிளம்பிவிடுவார். ஒரு நிலையில் மரப்பலகை முழுக்க ஆணிகளாக இருந்தன. ஒரு மனிதர் எவ்வளவு நாட்கள்தான் இப்படிச் செய்ய முடியும். ஆணி அடிக்கிற வேலையைச் செய்வதற்கு அலுத்துக்கொண்டு கோபத்தைக் குறைத்துவிட்டார் அந்த பையன்... கொஞ்ச நாளில் அவருக்குக் கோபமே வருவது இல்லை.
அப்பாவிடம் போய் சந்தோஷமாக தகவலைச் சொன்னார் மகன். அப்பா இப்போது இன்னொரு யோசனை சொன்னார். 'இனி, கோபம் வராத சமயங்களில் எல்லாம், அந்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கு' என்றார். சில நாட்களுக்குப் பிறகு அப்பாவிடம் சென்ற மகன், 'அப்பா, என்னோடு வந்து அந்த மரப் பலகையைப் பாருங்கள். இப்போது அதில் ஒரு ஆணிகூட இல்லை' என்றார்.
மரப்பலகையைப் பார்த்துவிட்டு அப்பா சொன்னார், 'மகனே, உனக்கு இப்போது கோபமே வருவது இல்லை. மகிழ்ச்சி. ஆனால், அத்தனை ஆணிகளையும் பிடுங்கிய பின்னரும் ஆணி அடித்த தடம் இருக்கிறதே அதை என்ன செய்ய முடியும்?' என்றார்.
நீங்கள் கோபப்பட்டதற்கும் கொட்டிய வார்த்தைகளுக்கும் மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், அது ஏற்படுத்திய காயங்கள் மாறாது என்பதைச் சொல்கிறது இந்தக் கதை. இரவு நன்றாகக் குடித்துவிட்டு, கூட இருப்பவர்களிடம் வம்பிழுத்துத் திட்டிவிட்டு, மறுநாள் காலை மன்னிப்புக் கேட்கிற செயலுக்கும், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு, ஸாரி சொல்கிற குணத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
கோபத்தை எங்கே, எப்படி, யாரிடம் எந்த வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆய்ந்து அதன்படி கோபப்படுகிற சக்தி பெரும்பாலானவர்களிடம் இருப்பது இல்லை. கோபப்படாமல் இரு என்று பொத்தாம் பொதுவாக சொல்லித் தருகிற சமூகமும், ஒரு மனிதனால் கோபப்படாமல் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்டுதான் அதைச் சொல்கிறது. அப்படி ஒற்றை வரியில் சொல்லிவிடுவது எளிதாகவும் இருக்கிறது.
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிறைய உத்திகள் சொல்லித்தரப்படுகின்றன. ஆனாலும், எந்தக் குறுக்கு வழியும் கோபத்தைக் கையாள்வதற்கான நிரந்தர வழியைச் சொல்லித்தருவது இல்லை.
கோபம் வந்தால், தண்ணீர் குடியுங்கள், கோபம் வந்தால் 100 வரை எண்ணுங்கள், கோபம் வந்தால், தனி அறைக்குள் போய் அடைந்துகொள்ளுங்கள், கோபம் வந்தால், மெல்லிய இசை கேளுங்கள், கோபம் வந்தால், யோகா செய்யுங்கள், கோபம் வந்தால், டி.வி-யில் காமெடி பாருங்கள், கோபம் வந்தால், இளைத்தவன் யாராவது இருந்தால் அவனை எட்டி உதையுங்கள், கோபம் வந்தால், வெறித்தனமாக விளை யாடுங்கள்... இப்படி நிறைய வழிகள் உண்டு, கோபத்தைக் கட்டுப்படுத்த.
இதைவிட மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. 'கோபம் வந்தால், அதற்கான காரணத்தைக் கவனியுங்கள். கோப மனநிலையில் நீங்கள் ஒரு முடிவு எடுத்தால், அதனால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். அதற்கான ஒரு வாய்ப்பை மேற்சொன்ன உத்திகள் உங்களுக்கு வழங்கலாம். மற்றபடி, அவை தற்காலிக ஏற்பாடுகள்தான்'.
கோபத்தைக் கட்டுப்படுத்துவதைவிட நெறிப்படுத்துதல்தான் அவசியம். பொதுமைப்படுத்திச் சொல்வதுபோல, கோபம் ஒன்றும் கெட்ட குணம் இல்லை. அதுவும் ஆளுமையின் அடையாளம்தான். உங்கள் கோபம் எதை நோக்கியது என்பதுதான் கேள்வி.
அது ஓர் ஆணவத்தின் வெளிப்பாடா? அதிகாரத்தின் துணிச்சலா? வெற்று வேடமா? சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான முயற்சியா என்பதை அறிந்துகொள்ள வேண்டியதுதான் அவசியம்.
பாரதிக்குக் கோபம் இருந்தது, பெரியாருக்குக் கோபம் இருந்தது, நேதாஜிக்குக் கோபம் இருந்தது, சே குவேராவுக்குக் கோபம் இருந்தது... அவை எல்லாம் அர்த்தமற்ற கோபங்கள் இல்லை. அவசியமான கோபங்கள். சமூகத்தின் அவலங்கள் மீதான கோபங்கள், சாதியக் கட்டுமானத்தின் மீதான கோபங்கள், அடிமைத்தனம் மீதான ஆத்திரங்கள், புரட்சிக்கு வழிவகுத்த கோபங்கள்.
இளைத்தவனை ஏறி மிதிப்பதற்கான உத்தியாக நாம் வெளிப்படுத்துவது கோபம் அல்ல; அகம்பாவம். அந்தக் கோபத்தால் நம் சுற்றத்தை மாசுபடுத்துகிறோம். இயலாதவனின் நிலையை ஏளனம் செய்கிறோம். அடையாளங்களின் மீது ஆபரணப் பூச்சு செய்யப் பார்க்கிறோம்.
எதிரில் இருப்பவனின் உண்மை பேசுவதற்கான வெளியைக் குறைக்கிறோம். அவரைப் பொய்யராக்குகிறோம். ஒரு ரம்மியமான சூழலைக் கலவரமாக்குகிறோம். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால், இன்னொரு மனிதனின் நியாயமான உரிமைகளையும் நமது நியாயமற்ற கோபங்கள் பறித்துவிடுகின்றன. உங்கள் கோபத்துக்குப் பயந்தே, பலரும் தங்கள் தரப்பு நியாயத்தையும், வார்த்தை களையும் புதைத்துவிடுகிறார்கள். இந்தக் கோபத்தால் யாருக்கு என்ன லாபம்?
கோபத்தைக் கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதனை நெறிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அந்த நெறிப்படுத்தல் சமூகத்தின் எல்லாத் தளங்களையும் சலவை செய்யும். தனி மனித உரிமைக்காக வாதாடும். உண்மைக்காகப் போராடும். தவறுகளைத் தட்டிக் கேட்கும். அநியாயத்தை அடக்கப் பார்க்கும். அடக்குமுறையை எதிர்த்து நிற்கும். அரசியலைக் கேள்வி கேட்கும்.
கோபம் ஓர் அற்புதமான சக்தி. சமூக மாற்றங்களுக்கான திறவுகோல். அதை அற்ப காரணங்களுக்காகச் செலவிடுவது மூடத்தனம்.
உங்கள் கோபம் நியாயமானதா இல்லையா? என்பதை உங்களைவிட வேறு யாரால் சரியாக உணர முடியும். அந்த உணர்தல் நிச்சயமாக அதைக் கையாள்வதற்கான நெறிமுறையைச் சொல்லித்தரும்.
கோபம் தரும் வெப்பத்தையும் அனலையும் சமூக அவலங்களுக்கு எதிராகத் திருப்புங்கள்.
தங்களுக்கு அடுத்த தலைமுறை, கோபம் என்ற ஆற்றலைச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சரியாகப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடுதான் நிறைய 'நியாய கோபக்காரர்கள்' மரித்துப்போய் இருக்கிறார்கள்.
எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படுவோம். அது, இன்னொருவரைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக, காயங்களுக்கு மருந்து போடும் என்று முழுமையாக நாம் நம்பும் பட்சத்தில்... கோபப்படுங்கள்!
'இந்த நிமிஷத்துல இருந்து நீ எனக்கு எதிரி. உன்னை ஒழித்துவிட்டுத்தான் என் அடுத்த வேலை' என்பார். தியேட்டரில் கை தட்டல் சத்தம் காதைப் பிளக்கும். ஆத்திரத்திலும் கோபத்திலும் ஹீரோ எடுக்கும் முடிவை அனைவரும் ஆர்வத்தோடு வரவேற்கிறோம்.
கோபப்பட்டு உணர்ச்சிபூர்வமாகி எடுக்கப்படும் முடிவுகளில் ஒரு ஹீரோயிசமும், அதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்தும் இருப்பதாக நம்பியே வந்திருக்கிறோம். சினிமாவில் சரி, நிஜ வாழ்க்கையில் கோபத்தில் எடுக்கும் முடிவுகளும் தீர்மானங்களும் சரியாக இருக்குமா? அந்தக் கணத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கிற முடிவுகள், ஆய்வுகள் அற்ற... புரிதல் அற்ற அந்தத் தீர்மானம் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்?
ஆனாலும், பல முடிவுகள் கோபத்திலும் அது தரும் உந்துதலிலும்தான் எடுக்கப்படுகின்றன. அப்படி எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இங்கு பல கதைகளும் உண்டு. கொஞ்சம் நிதானமாக யோசித்தால், நாமும் பல நேரங்களில் அத்தகைய முடிவுகளை எடுத்து சூடு போட்டுக்கொண்டது ஞாபத்துக்கு வரலாம்.
கோபம்பற்றிப் பல்வேறு விதமான பார்வைகள் உண்டு. அவரவரின் அனுபவம், சுற்றுச்சூழல், சமூக அழுத்தம் இப்படிப் பல காரணிகளைப் பொறுத்து அந்தப் பார்வைகள் அமையும். கோபமே படக் கூடாது. சாந்தமாக இருங்கள். கோபப்படலேன்னா வேலை நடக்காது. சரியான இடத்துல, சரியான நேரத்துல கோபப்படணும் - கோபப்படலாம். ஆனா, அதை வெளிப்படுத்தக் கூடாது - கோபத்தை வெளிப்படுத்தலேன்னா அது மனசுக்குள் தங்கிச் சிக்கலை உண்டாக்கிவிடும் - இப்படி நிறையப் பார்வைகள்.
கோபம், சுயநலத்தின் வெளிப்பாடு என்று ஒரு பார்வையும் உண்டு. அவன் மேல எனக்கு செம கடுப்பு. ஆத்திரம்னா அவ்வளவு ஆத்திரம். போனைப் போட்டு திட்டுதிட்டுனு திட்டித் தீர்த்துட்டேன். இப்போதான் மனசு நிம்மதியா இருக்கு என்று சிலர் சொல்வார்கள். அடுத்தவரின் மனநிலையும் சூழலும் என்ன என்ற கவலைகள் எதுவும் இன்றி என் கோபத்தைக் கொட்டியாயிற்று.
கோபத்திலும் 'காரியக்கார' கோபம் ஒன்று உண்டு. எவரால் தனக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாதோ, அவருக்கு எதிராகச் சேர்த்துவைத்திருக்கும் ஆத்திரம் அனைத்தும் அனலாகக் கொப்பளிக்கிற உத்தி அது.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எதாவது கோபத்தில் இருந்தால், போனை எடுத்து எடுத்துப் பார்ப்பார். ஏன் இப்படிச் செய்கிறார் என்று ஒருநாள் விசாரித்தேன். 'அது ஒண்ணுமில்லை... நான் கோபமாக இருக்கிற நேரத்தில் கிரெடிட் கார்டு வேணுமா, லோன் வேணுமா என்று முகம் தெரியாத ஆட்கள் போன் செய்தால், அவர்களைத் திட்டுத் திட்டு என்று திட்டித் தீர்ப்பேன். எனக்கு மனசுல இருக்கற பாரம் எல்லாம் குறைந்துபோகும். அதான்' என்றார்.
எதிர்ப்பதற்கு வலு இல்லாத, முகம் தெரியாத மனிதர்களிடம் கோபத்தைக் காட்டுவது அந்த மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கான வடிகால் என்று அதை ஓர் உத்தியாகக் கையாளுகிற புத்திசாலி கோபக்காரர்கள் நிறைய உண்டு. கஸ்டமர் சர்வீஸில் இருந்து போன் செய்தவர், போனை வைத்தபிறகு அநேகமாக ஆபீஸ் பையனை அழைத்து காட்டுக் கத்தல் கத்தியிருப்பார்.
ஒரு தனி மனிதரின் கோபம் அவரோடு நின்றுவிடுவது இல்லை. அது ஒரு சங்கிலித் தொடர்போல நிறையப் பேருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. நிறைய மனங்களைக் காயப்படுத்துகிறது. தன் கோபத்தை வெளிப்படுத்த வலு இல்லாத ஒரு எதிராளியைத் தேடுகிற காரியக்கார கோபவாதிகளாகத்தான் நிறையப் பேர் இருக்கிறோம்.
மேலதிகாரி தன்னிடம் காட்டிய கோபத்தை அப்பா, அம்மா மீது காட்டுகிறார். அம்மா, பிள்ளை மீது காட்டுகிறார். அந்தப் பிள்ளை, தன் தம்பி மீதோ, தங்கை மீதோ காட்டுகிறார். அவர் அந்தக் கோபத்தைத் தன் நண்பரிடம் வெளிப்படுத்துகிறார். அவர் தன் ஆத்திரத்தை இன்னொருவரிடம் கொட்டுகிறார். அந்த இன்னொருவர் தன் கோபத்தை வெளிப்படுத்த, அடுத்த ஆளைத் தேடுகிறார்.
உங்கள் ஒருவரின் கோபம் உங்களைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல; உங்களோடு தொடர்பில் இல்லாத பலரையும் சங்கடத்துக்கு ஆளாக்குகிறது. கோபம்பற்றி இவ்வளவு ஆராய வேண்டாம்... கோபம் வந்தால் யாரையாவது பிடிச்சுத் திட்ட வேண்டியதுதான். அப்புறம் மன்னிப்பு கேட்டுக்கலாம் என்ற மனோபாவமும் உண்டு. மன்னிப்புக் கேட்பதால், உங்கள் மனசு சாந்தம் அடையலாம். ஆனால், சம்பந்தப்பட்டவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
கோபம்பற்றி பிரபலமான ஒரு கதை உண்டு. நீங்களும் கேள்விப்பட்டு இருக் கலாம். ஒரு பையனுக்கு பயங்கரமான கோபம் வருமாம். ஆத்திரம் வந்தால் அனைவரையும் திட்டித் தீர்ப்பார். அவரது கோபத்தைக் கட்டுப்படுத்த அவன் அப்பா ஓர் உத்தி சொன்னார்... 'உனக்குக் கோபம் வரும்போது எல்லாம் வீட்டின் பின்பக்கத்தில் இருக்கிற மரப்பலகையில் ஒரு ஆணி அடித்து வை' என்றார். மகனும் அப்படியே செய்ய ஆரம்பித்தார். கோபம் வருகிறபோது எல்லாம் சுத்தியலையும் ஆணியையும் எடுத்துக்கொண்டு மரப்பலகையை நோக்கிக் கிளம்பிவிடுவார். ஒரு நிலையில் மரப்பலகை முழுக்க ஆணிகளாக இருந்தன. ஒரு மனிதர் எவ்வளவு நாட்கள்தான் இப்படிச் செய்ய முடியும். ஆணி அடிக்கிற வேலையைச் செய்வதற்கு அலுத்துக்கொண்டு கோபத்தைக் குறைத்துவிட்டார் அந்த பையன்... கொஞ்ச நாளில் அவருக்குக் கோபமே வருவது இல்லை.
அப்பாவிடம் போய் சந்தோஷமாக தகவலைச் சொன்னார் மகன். அப்பா இப்போது இன்னொரு யோசனை சொன்னார். 'இனி, கோபம் வராத சமயங்களில் எல்லாம், அந்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கு' என்றார். சில நாட்களுக்குப் பிறகு அப்பாவிடம் சென்ற மகன், 'அப்பா, என்னோடு வந்து அந்த மரப் பலகையைப் பாருங்கள். இப்போது அதில் ஒரு ஆணிகூட இல்லை' என்றார்.
மரப்பலகையைப் பார்த்துவிட்டு அப்பா சொன்னார், 'மகனே, உனக்கு இப்போது கோபமே வருவது இல்லை. மகிழ்ச்சி. ஆனால், அத்தனை ஆணிகளையும் பிடுங்கிய பின்னரும் ஆணி அடித்த தடம் இருக்கிறதே அதை என்ன செய்ய முடியும்?' என்றார்.
நீங்கள் கோபப்பட்டதற்கும் கொட்டிய வார்த்தைகளுக்கும் மன்னிப்பு கேட்டுவிடலாம். ஆனால், அது ஏற்படுத்திய காயங்கள் மாறாது என்பதைச் சொல்கிறது இந்தக் கதை. இரவு நன்றாகக் குடித்துவிட்டு, கூட இருப்பவர்களிடம் வம்பிழுத்துத் திட்டிவிட்டு, மறுநாள் காலை மன்னிப்புக் கேட்கிற செயலுக்கும், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டு பிறகு, ஸாரி சொல்கிற குணத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
கோபத்தை எங்கே, எப்படி, யாரிடம் எந்த வகையில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆய்ந்து அதன்படி கோபப்படுகிற சக்தி பெரும்பாலானவர்களிடம் இருப்பது இல்லை. கோபப்படாமல் இரு என்று பொத்தாம் பொதுவாக சொல்லித் தருகிற சமூகமும், ஒரு மனிதனால் கோபப்படாமல் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொண்டுதான் அதைச் சொல்கிறது. அப்படி ஒற்றை வரியில் சொல்லிவிடுவது எளிதாகவும் இருக்கிறது.
கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நிறைய உத்திகள் சொல்லித்தரப்படுகின்றன. ஆனாலும், எந்தக் குறுக்கு வழியும் கோபத்தைக் கையாள்வதற்கான நிரந்தர வழியைச் சொல்லித்தருவது இல்லை.
கோபம் வந்தால், தண்ணீர் குடியுங்கள், கோபம் வந்தால் 100 வரை எண்ணுங்கள், கோபம் வந்தால், தனி அறைக்குள் போய் அடைந்துகொள்ளுங்கள், கோபம் வந்தால், மெல்லிய இசை கேளுங்கள், கோபம் வந்தால், யோகா செய்யுங்கள், கோபம் வந்தால், டி.வி-யில் காமெடி பாருங்கள், கோபம் வந்தால், இளைத்தவன் யாராவது இருந்தால் அவனை எட்டி உதையுங்கள், கோபம் வந்தால், வெறித்தனமாக விளை யாடுங்கள்... இப்படி நிறைய வழிகள் உண்டு, கோபத்தைக் கட்டுப்படுத்த.
இதைவிட மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. 'கோபம் வந்தால், அதற்கான காரணத்தைக் கவனியுங்கள். கோப மனநிலையில் நீங்கள் ஒரு முடிவு எடுத்தால், அதனால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். அதற்கான ஒரு வாய்ப்பை மேற்சொன்ன உத்திகள் உங்களுக்கு வழங்கலாம். மற்றபடி, அவை தற்காலிக ஏற்பாடுகள்தான்'.
கோபத்தைக் கட்டுப்படுத்துவதைவிட நெறிப்படுத்துதல்தான் அவசியம். பொதுமைப்படுத்திச் சொல்வதுபோல, கோபம் ஒன்றும் கெட்ட குணம் இல்லை. அதுவும் ஆளுமையின் அடையாளம்தான். உங்கள் கோபம் எதை நோக்கியது என்பதுதான் கேள்வி.
அது ஓர் ஆணவத்தின் வெளிப்பாடா? அதிகாரத்தின் துணிச்சலா? வெற்று வேடமா? சிறப்பு அந்தஸ்து பெறுவதற்கான முயற்சியா என்பதை அறிந்துகொள்ள வேண்டியதுதான் அவசியம்.
பாரதிக்குக் கோபம் இருந்தது, பெரியாருக்குக் கோபம் இருந்தது, நேதாஜிக்குக் கோபம் இருந்தது, சே குவேராவுக்குக் கோபம் இருந்தது... அவை எல்லாம் அர்த்தமற்ற கோபங்கள் இல்லை. அவசியமான கோபங்கள். சமூகத்தின் அவலங்கள் மீதான கோபங்கள், சாதியக் கட்டுமானத்தின் மீதான கோபங்கள், அடிமைத்தனம் மீதான ஆத்திரங்கள், புரட்சிக்கு வழிவகுத்த கோபங்கள்.
இளைத்தவனை ஏறி மிதிப்பதற்கான உத்தியாக நாம் வெளிப்படுத்துவது கோபம் அல்ல; அகம்பாவம். அந்தக் கோபத்தால் நம் சுற்றத்தை மாசுபடுத்துகிறோம். இயலாதவனின் நிலையை ஏளனம் செய்கிறோம். அடையாளங்களின் மீது ஆபரணப் பூச்சு செய்யப் பார்க்கிறோம்.
எதிரில் இருப்பவனின் உண்மை பேசுவதற்கான வெளியைக் குறைக்கிறோம். அவரைப் பொய்யராக்குகிறோம். ஒரு ரம்மியமான சூழலைக் கலவரமாக்குகிறோம். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால், இன்னொரு மனிதனின் நியாயமான உரிமைகளையும் நமது நியாயமற்ற கோபங்கள் பறித்துவிடுகின்றன. உங்கள் கோபத்துக்குப் பயந்தே, பலரும் தங்கள் தரப்பு நியாயத்தையும், வார்த்தை களையும் புதைத்துவிடுகிறார்கள். இந்தக் கோபத்தால் யாருக்கு என்ன லாபம்?
கோபத்தைக் கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதனை நெறிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. அந்த நெறிப்படுத்தல் சமூகத்தின் எல்லாத் தளங்களையும் சலவை செய்யும். தனி மனித உரிமைக்காக வாதாடும். உண்மைக்காகப் போராடும். தவறுகளைத் தட்டிக் கேட்கும். அநியாயத்தை அடக்கப் பார்க்கும். அடக்குமுறையை எதிர்த்து நிற்கும். அரசியலைக் கேள்வி கேட்கும்.
கோபம் ஓர் அற்புதமான சக்தி. சமூக மாற்றங்களுக்கான திறவுகோல். அதை அற்ப காரணங்களுக்காகச் செலவிடுவது மூடத்தனம்.
உங்கள் கோபம் நியாயமானதா இல்லையா? என்பதை உங்களைவிட வேறு யாரால் சரியாக உணர முடியும். அந்த உணர்தல் நிச்சயமாக அதைக் கையாள்வதற்கான நெறிமுறையைச் சொல்லித்தரும்.
கோபம் தரும் வெப்பத்தையும் அனலையும் சமூக அவலங்களுக்கு எதிராகத் திருப்புங்கள்.
தங்களுக்கு அடுத்த தலைமுறை, கோபம் என்ற ஆற்றலைச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகச் சரியாகப் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடுதான் நிறைய 'நியாய கோபக்காரர்கள்' மரித்துப்போய் இருக்கிறார்கள்.
எவ்வளவு வேண்டுமானாலும் கோபப்படுவோம். அது, இன்னொருவரைக் காயப்படுத்துவதற்குப் பதிலாக, காயங்களுக்கு மருந்து போடும் என்று முழுமையாக நாம் நம்பும் பட்சத்தில்... கோபப்படுங்கள்!
நீயும்... நானும்! - கோபிநாத்
பெயின்ட் விற்பனை செய்கிற கடையில் சமீபத்தில் பார்த்த ஒரு காட்சி...
பெயின்ட் வாங்க வந்த ஒருவர், "வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும்? இருக்கிறதுலயே நல்ல கலர் எது?" என்று கேட் டார். கடைக்காரர் அழகாக ஒரு பதில் சொன்னார்... "கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒண்ணும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ, அது நல்ல கலர். உங்களுக்குப் பிடிக்காத கலர், இன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்!"
எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதோ ஒரு ரசனை இருக்கிறது. அதைக் கவனிப்பதைவிட, அதை ரசிப்பதைவிட, அடுத்தவரின் ரசனைபற்றியே அதிகம் யோசிக்கிறோம். நம் சமூகச் சூழலும் நல்ல ரசனை, மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.
ரசனை என்பது அவரவரின் தனிப்பட்டகுணாம் சம். சாந்தமாக, வாழ்வியல் சூழல் சார்ந்ததாக, அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது, உயர்வான ரசனை, மட்டமான ரசனை என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?
ஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம் தான். ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப் பட்டதால், அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவது இல்லை.
நாம் கொண்டாடுகிற, பெருமை பேசிக் கொள்கிற உயர்வினை, மதிப்பீடுகளாக நாமே சித்திரிக்கிற நமது பல ரசனைகள், புறச் சூழல் களாலும், செயற்கையான ஏற்பாடுகளாலும் நம்முள் புகுத்தப்பட்டவைதான். இதில் உயர் வான ரசனை, கேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்?
இயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்ற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும் எருமைக் கூட்டமும் பிடித்து இருக்கலாம். தத்தித் தத்தி ஓடும் அணில் அழ கானது என்பது உங்கள் ரசனையாக இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன் னொருவரின் ரசனையாக இருக்கலாம்.
அழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்வது, உண்மையில் போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.
செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்க ளுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம். அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்ட முடியாது.
நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத் தன்மைகள், நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை. அழகான ஆங்கிலம் பேசுகிற, அழுக்கு இல்லாத சட்டை உடுத்துகிற, பரவலாகப் பலராலும் கவனிக்கப்படுகிற மனிதர்கள் முன்மொழிந்த ரசனைகளை நாம் வழிமொழிகிறோம். பிறகு, அதையே சிறந்த ரசனை என்று கொண்டாடுகிறோம். அதை அடுத்தவர் மீதும் திணிக்கிறோம். அதை ஏற்காதவரை ரசனை இல்லாதவர் என்றும் விமர்சிக்கிறோம்.
இந்த உலகம் பல்வேறு ரசனைகளால் ஆனது. இங்கு மணிரத்னம் படம் ஓடும், பேரரசு படம் ஓடும், கௌதம் மேனன் படம் ஓடும், எஸ்.பி.முத்துராமன் பாணி படம் ஓடும், மகேந்திரன் பாணி படங்கள் ஓடும், சசிகுமார் ஒரு பக்கம் தன் படைப்பை முன் வைப்பார். கே.எஸ்.ரவிக்குமார் இன்னொரு படைப்பை முன்னிறுத்துவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனை.
இந்த நிலையில் அந்த இயக்குநரின் படங்களைப் பார்ப்பது உயர்வான ரசனை என்றும், வேறொரு இயக்குநரின் படங்களைப் பார்ப்பது மட்டமான ரசனை என்றும் அந்த உணர்வியலைப் பாகுபாடு செய்வது இயல்புக்கு விரோதமானது. பெயின்ட் கடைக்காரர் சொன்னது மாதிரி, ரசனையிலும் நல்ல ரசனை, கெட்ட ரசனை என்ற வேறுபாடு இல்லை.
உங்களது ரசனை உயர்வானது என்று எப்படி நம்புகிறீர்களோ, அதேபோல் அடுத்தவரின் ரசனையும் உயர்வானதே. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று முத்திரை குத்த முனைவது நம் பிடிவாதத்தையே காட்டுகிறது.
ரசனை என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் எதுவும் வகுக்க முடியாது. அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. இன்றைக்கு நீங்கள் கொண்டாடும் ஒரு விஷயத்தை நாளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கும்போது, இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்வதற்கு இல்லை.
சில இசைக்கு தலை ஆடும், சில இசைக்குக் கால் ஆடும். ஓர் இசை காதைக் கிழிக்கும், ஓர் இசை காற்றில் தவழும், ஒரு நிறம் கண்ணைப் பறிக்கும், ஒரு நிறம் லேசாய் மிளிரும், ஓர் ஓவியத்தில் உருவம் தெரியும், இன்னொன்றில் கோடுகள்தான் புரியும். கண்ணில் நீர் வர காரம் சாப்பிடுதல் ஒரு ரசனை, உறைப்பே இல்லாமல் ஆகாரம் என்பது இன்னொரு ரசனை. இதில் எதுவுமே நிரந்தரமானது அல்ல.
நீங்கள் இன்றைக்கு சிறந்த ரசனை என்று நினைத்துப் போற்றும் ஒன்றை நாளை நீங்களே விமர்சிக்கலாம். அப்படி இருக்க, ரசனைகளில் ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டியது இல்லை.
ரசனை என்பது சொந்த உணர்வுகளின் வெளிப்பாடு. அதை யாரிடமும் கடன் வாங்க வேண்டியது இல்லை. பிரபலமாக நிறையப் பேர் ஏற்றுக்கொண்டதால், அது சிறந்த ரசனையாக இருக்க வேண்டும் என்ற அவசி யம் இல்லை. உங்கள் ரசனைகளையும் ரசிப்புத் தன்மையையும் உங்களுக்குள் தேடுங்கள்.
என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார், அவர் எது அணிந்தாலும் அவ ருக்கு அது பொருத்தமாகவே இருக்கும். ஆனால், அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த் ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒரு முறை அதை கேட்க வும் செய்தேன். "நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார்.
என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ, அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை. நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ, அதைப் பின்பற்றுவது ரசனை இல்லை. 'நானும் இருக்கிறேன்... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்பதற்கான முயற்சி.
நீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால், அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறு ஒரு ரகம். முடிந்தால், அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். நீரோடையின் அழகை ரசித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு, நீரோடைக்கு அப்பால் அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம். பூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துகிடக்கலாம்... காய்ந்துகிடக்கும் கரு வேல மரங்களைக் கவனித்துக்கொண்டு இருப்பவரின் ரசனைக்கும் காரணம் இருக்கும்.
மேல்தட்டு வாழ்க்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர் வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்ப தைப்போலவே இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் உயர்வென்ன... தாழ்வு என்ன?
எல்லா ரசனைகளும் மேலானதுதான். அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்ய முடியாது.
முடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் ரசனைகளையும் அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்!
பெயின்ட் வாங்க வந்த ஒருவர், "வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும்? இருக்கிறதுலயே நல்ல கலர் எது?" என்று கேட் டார். கடைக்காரர் அழகாக ஒரு பதில் சொன்னார்... "கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒண்ணும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ, அது நல்ல கலர். உங்களுக்குப் பிடிக்காத கலர், இன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்!"
எல்லா மனிதர்களுக்குள்ளும் ஏதோ ஒரு ரசனை இருக்கிறது. அதைக் கவனிப்பதைவிட, அதை ரசிப்பதைவிட, அடுத்தவரின் ரசனைபற்றியே அதிகம் யோசிக்கிறோம். நம் சமூகச் சூழலும் நல்ல ரசனை, மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.
ரசனை என்பது அவரவரின் தனிப்பட்டகுணாம் சம். சாந்தமாக, வாழ்வியல் சூழல் சார்ந்ததாக, அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது, உயர்வான ரசனை, மட்டமான ரசனை என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்?
ஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம் தான். ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப் பட்டதால், அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம். ஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவது இல்லை.
நாம் கொண்டாடுகிற, பெருமை பேசிக் கொள்கிற உயர்வினை, மதிப்பீடுகளாக நாமே சித்திரிக்கிற நமது பல ரசனைகள், புறச் சூழல் களாலும், செயற்கையான ஏற்பாடுகளாலும் நம்முள் புகுத்தப்பட்டவைதான். இதில் உயர் வான ரசனை, கேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்?
இயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்ற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும் எருமைக் கூட்டமும் பிடித்து இருக்கலாம். தத்தித் தத்தி ஓடும் அணில் அழ கானது என்பது உங்கள் ரசனையாக இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன் னொருவரின் ரசனையாக இருக்கலாம்.
அழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்வது, உண்மையில் போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.
செடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்க ளுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம். அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்ட முடியாது.
நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத் தன்மைகள், நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை. அழகான ஆங்கிலம் பேசுகிற, அழுக்கு இல்லாத சட்டை உடுத்துகிற, பரவலாகப் பலராலும் கவனிக்கப்படுகிற மனிதர்கள் முன்மொழிந்த ரசனைகளை நாம் வழிமொழிகிறோம். பிறகு, அதையே சிறந்த ரசனை என்று கொண்டாடுகிறோம். அதை அடுத்தவர் மீதும் திணிக்கிறோம். அதை ஏற்காதவரை ரசனை இல்லாதவர் என்றும் விமர்சிக்கிறோம்.
இந்த உலகம் பல்வேறு ரசனைகளால் ஆனது. இங்கு மணிரத்னம் படம் ஓடும், பேரரசு படம் ஓடும், கௌதம் மேனன் படம் ஓடும், எஸ்.பி.முத்துராமன் பாணி படம் ஓடும், மகேந்திரன் பாணி படங்கள் ஓடும், சசிகுமார் ஒரு பக்கம் தன் படைப்பை முன் வைப்பார். கே.எஸ்.ரவிக்குமார் இன்னொரு படைப்பை முன்னிறுத்துவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனை.
இந்த நிலையில் அந்த இயக்குநரின் படங்களைப் பார்ப்பது உயர்வான ரசனை என்றும், வேறொரு இயக்குநரின் படங்களைப் பார்ப்பது மட்டமான ரசனை என்றும் அந்த உணர்வியலைப் பாகுபாடு செய்வது இயல்புக்கு விரோதமானது. பெயின்ட் கடைக்காரர் சொன்னது மாதிரி, ரசனையிலும் நல்ல ரசனை, கெட்ட ரசனை என்ற வேறுபாடு இல்லை.
உங்களது ரசனை உயர்வானது என்று எப்படி நம்புகிறீர்களோ, அதேபோல் அடுத்தவரின் ரசனையும் உயர்வானதே. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று முத்திரை குத்த முனைவது நம் பிடிவாதத்தையே காட்டுகிறது.
ரசனை என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் எதுவும் வகுக்க முடியாது. அது மாறிக்கொண்டே இருக்கக் கூடியது. இன்றைக்கு நீங்கள் கொண்டாடும் ஒரு விஷயத்தை நாளை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அப்படி இருக்கும்போது, இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்வதற்கு இல்லை.
சில இசைக்கு தலை ஆடும், சில இசைக்குக் கால் ஆடும். ஓர் இசை காதைக் கிழிக்கும், ஓர் இசை காற்றில் தவழும், ஒரு நிறம் கண்ணைப் பறிக்கும், ஒரு நிறம் லேசாய் மிளிரும், ஓர் ஓவியத்தில் உருவம் தெரியும், இன்னொன்றில் கோடுகள்தான் புரியும். கண்ணில் நீர் வர காரம் சாப்பிடுதல் ஒரு ரசனை, உறைப்பே இல்லாமல் ஆகாரம் என்பது இன்னொரு ரசனை. இதில் எதுவுமே நிரந்தரமானது அல்ல.
நீங்கள் இன்றைக்கு சிறந்த ரசனை என்று நினைத்துப் போற்றும் ஒன்றை நாளை நீங்களே விமர்சிக்கலாம். அப்படி இருக்க, ரசனைகளில் ஏற்றத் தாழ்வு பார்க்க வேண்டியது இல்லை.
ரசனை என்பது சொந்த உணர்வுகளின் வெளிப்பாடு. அதை யாரிடமும் கடன் வாங்க வேண்டியது இல்லை. பிரபலமாக நிறையப் பேர் ஏற்றுக்கொண்டதால், அது சிறந்த ரசனையாக இருக்க வேண்டும் என்ற அவசி யம் இல்லை. உங்கள் ரசனைகளையும் ரசிப்புத் தன்மையையும் உங்களுக்குள் தேடுங்கள்.
என் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார், அவர் எது அணிந்தாலும் அவ ருக்கு அது பொருத்தமாகவே இருக்கும். ஆனால், அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த் ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒரு முறை அதை கேட்க வும் செய்தேன். "நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை" என்றார்.
என்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ, அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை. நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ, அதைப் பின்பற்றுவது ரசனை இல்லை. 'நானும் இருக்கிறேன்... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்பதற்கான முயற்சி.
நீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால், அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறு ஒரு ரகம். முடிந்தால், அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். நீரோடையின் அழகை ரசித்துக்கொண்டு இருக்கும் உங்களுக்கு, நீரோடைக்கு அப்பால் அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம். பூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துகிடக்கலாம்... காய்ந்துகிடக்கும் கரு வேல மரங்களைக் கவனித்துக்கொண்டு இருப்பவரின் ரசனைக்கும் காரணம் இருக்கும்.
மேல்தட்டு வாழ்க்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர் வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத்தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்ப தைப்போலவே இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் உயர்வென்ன... தாழ்வு என்ன?
எல்லா ரசனைகளும் மேலானதுதான். அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்ய முடியாது.
முடிந்தால் அடுத்தவரின் ரசனையில் இருக்கும் ரசனைகளையும் அறிந்துகொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்!
Subscribe to:
Posts (Atom)